உயிர் காக்கும் ரெம்டெசிவிர் மருந்து... இந்தியாவுக்கு நன்கொடையாக வழங்கும் அமெரிக்க நிறுவனம்
வாஷிங்டன்: கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் சுமார் 4.50 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகளை இந்தியாவுக்கு இலவசமாக வழங்கவுள்ளதாக கிலியட் சையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் தினசரி கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்றின் தீவிர தன்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

கொரோனாவால் தீவிரமாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படுகிறது. இருப்பினும், தேவைக்கு ஏற்ற வகையில் இந்தியாவில் ரெம்டெசிவிர் உற்பத்தி இல்லை.
இதனால் ரெம்டெசிவிருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ரெம்டெசிவிர் மருந்து கள்ளச் சந்தையில் பல மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் நிகழ்வுகளும் நடைபெறுகிறது.
இப்போது இந்த ரெம்டெசிவிர் மருந்தின் காப்புரிமை தற்போது அமெரிக்காவின் கிலியட் சையன்ஸ் நிறுவனத்திடம் உள்ளது. இந்தியாவில் தற்போது ரெம்டெசிவிர் மருந்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து சுமார் 4.50 லட்சம் ரெம்டெசிவிர் மருத்துவ குப்பிகளை இந்தியாவுக்கு நன்கொடையாக வழங்குவதாக கிலியட் சையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழகத்திலும் ரெம்டெசிவிர் மருந்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரெம்டெசிவிர் தேவைப்படுவோர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பெற்றுக்கொள்ளலாம் எனத் தமிழக அரசும் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications