அந்தரத்தில் "காம" ஆசை! ராட்டினத்தில் நிர்வாணமாக சிக்கிய காதலர்கள்..விளக்கத்தை கேட்டு மிரண்ட போலீசார்
வாஷிங்டன்: அமெரிக்காவில் தீம் பார்க்குகளில் காதல் ஜோடி செய்த செயல் அங்கிருந்தவர்களை மிரளச் செய்துவிட்டது.
Recommended Video
தீம் பார்க்குகளுக்கு சென்றால், அமைதியாக அங்கிருக்கும் ரெய்டுகளில் ஆட்டம் போட்டுவிட்டு, அலங்காரங்களை ரசித்துவிட்டு வர வேண்டும். ஆனால், அனைவருமே அப்படி நடந்து கொள்வதில்லை.
அதிலும் காதலிக்கும் பல இளசுகள் பல சமயங்களில் இருக்கும் இடம் தெரியாமல் எல்லை மீறி மாட்டிக் கொள்வார்கள். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் வந்த ரூ.1 கோடிக்கான கேள்வி.. உங்களால் பதில் சொல்ல முடியுமா? சவால்!
மிரண்ட போலீசார்
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் தான் இந்த வினோத சம்பவம் அரங்கேறி உள்ளது. இது தொடர்பாக தீம் பார்க் நிர்வாகம் போலீசாரை தொடர்பு கொண்ட போது, அவர்களே நம்பவில்லையாம். இருப்பினும், தீம் பார்க் நிர்வாகத்தினர் வலியுறுத்திய பின்னரே, அது உண்மை என்பது தெரிய வந்துள்ளது. போலீசாரே மிரண்டு போகும் அளவுக்கு அப்படி என்ன தான் நடந்தது! வாருங்கள் பார்க்கலாம்!
அமெரிக்கா
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் சிடார் பாயிண்ட் கேளிக்கை பூங்கா இயங்கி வருகிறது. அங்கு சுமார் 32 வயது மதிக்கத்தக்க ஆணும் பெண்ணும் சென்றுள்ளனர். அங்குள்ள அனைத்து ரெய்டுகளிலும் விளையாடி அவர்கள் ஜெயின்ட் வீல் ரெய்டிற்கு சென்றுள்ளனர். தீம் பார்க்கில் குறைவான கூட்டமே இருந்த நிலைில், ஜெயின்ட் வீலை ஆன் செய்துவிட்டு ஊழியர் அங்கிருந்து சென்றுவிட்டதாகத் தெரிகிறது.
ஜெயின்ட் வீல்
அப்போது ஜெயின்ட் வீல் சுற்றிக் கொண்டு இருக்கும் போதே, இருவரும் திடீரென்று ஆடைகளைக் கலைந்து உடலுறவு வைத்துக் கொள்ளத் தொடங்கி உள்ளனர். ஜெயின்ட் வீல் ரைய்டு முடியும் வரை அவர்களின் இந்த எல்லை மீறல் முடியவில்லை இதை அங்கிருந்து இரு சிறுமிகள் உட்பட நான்கு பெண்கள் பார்த்துள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே தீம் பார்க் நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
வினோத விளக்கம்
போலீசார் வந்து விசாரித்த போது, முதலில் இருவருமே தாங்கள் ஜெயின்ட் வீலில் உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை என்றே மறுத்துள்ளனர். இதில் அந்த பெண் கொடுத்த விளக்கம் தான் வினோதமானது. அதாவது சிகரெட் கீழே விழுந்துவிட்டதால் குனிந்து அதை எடுத்ததாகவும் அப்போது பின்னால் இருந்து தனது காதலனும் சிகரெட்டை எடுக்க உதவி செய்ததாகவும் விசித்திரமான விளக்கத்தை கொடுத்து போலீசாரையே ஒரு நிமிடம் மிரளச் செய்துவிட்டார்.
சிரித்துக் கொண்டே
இருப்பினும், இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த பெண்கள் இதை மறுத்தனர். ஜெயிண்ட் வீல் சுற்றிக் கொண்டு இருக்கும் போதே, இருவரும் ஆடைகளைக் கலைந்து நிர்வாணமானதாகத் தெரிவித்தனர். மேலும், "உடலுறவு கொண்டிருக்கும் போது எங்களுடன் வந்து குழந்தைகள் இதைப் பார்த்தது அவர்களுக்குத் தெரியும். அப்போதும் கூட சிரித்துக் கொண்டே உடலுறவைத் தொடரவே செய்தனர்" என்றார்.
கைது
தங்கள் மீதான குற்றச்சாட்டைத் தொடர்ந்து மறுத்தே வந்த ஜோடியின் பொய்களுக்கு இவர்களின் வாக்குமூலம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. வேறு வழியில்லாமல் கடைசியில் அவர்கள் ஜெயின்ட் வீலில் உடலுறவு வைத்துக் கொண்டதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.