எச்1பி விசா.. இந்தியர்களுக்கு தற்காலிக நிம்மதி.. கணவன்.. மனைவி அமெரிக்காவில் பணிபுரிய தடையில்லை
வாஷிங்டன்: : எச்1பி விசா வைத்திருப்பவர்ளின் மனைவி மற்றும் கணவர், அமெரிக்காவில் பணிபுரிவதற்கு தடை விதிக்க அமெரிக்காவின் கொலம்பியா நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி வேலை செய்யும் வெளிநாட்டவர்களுக்கு எச்-1பி விசா வழங்கப்படுவது வழக்கம். குறிப்பாக இந்த விசா, அதிக திறன் வாய்ந்த தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த பணிகளை பெரும்பாலும் இந்தியர்கள் அதிக அளவு பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் எச்-1பி விசா வைத்திருப்போரின் கணவன் அல்லது மனைவிக்கு எச்-4 இஏடி விசா அளித்து அமெரிக்காவில் பணியாற்றுவதை சட்டப்பூர்வமாக்கும் சட்டம் கடந்த 2015ல் ஒபாமா அதிபராக இருந்த போது கொண்டு வரப்பட்டது.

நீதிமன்றத்தில் வழக்கு
ஆனால் அதிபர் டொனால்டு டிரம்ப் பதவியேற்ற போது,‘அமெரிக்க வேலைவாய்ப்புகள் அமெரிக்கர்களுக்கே என்ற கொள்கையை அறிமுகம் செய்தார். அத்துடன் எச்-4 விசாவில் பணியாற்றும் திட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்தார். இந்த திட்டத்தை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி ‘சேவ் ஜாப்ஸ் அமெரிக்கா' என்ற அமைப்பு, அங்குள்ள மாவட்ட நீதிமன்றத்தில் 2016ல் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

டிரம்ப் நிர்வாகம் விளக்கம்
இதனிடையே ‘சேவ் ஜாப்ஸ் அமெரிக்கா' அமைப்பு கொலம்பியா மாவட்ட மேல்முறையீடு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, டிரம்ப் நிர்வாகம் தாக்கல் செய்த அறிக்கையில், எச்-4 விசாவில் பணியாற்றும் திட்டத்தை ரத்து செய்வதற்கான பணிகளை அரசு மும்முரமாக செய்து வருவதாக தெரிவித்து இருந்தது.

சட்டத்தை நீக்க முடியாது
இந்நிலையில், இந்த வழக்கில் மேல்முறையீடு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ‘‘எச்-1பி விசா வைத்திருப்போரின் கணவனோ அல்லது மனைவியோ அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான சட்டத்தை நீக்க முடியாது.. இந்த வழக்கை ஆரம்ப கட்டத்தில் மீண்டும் முழுமையாக மதிப்பீடு செய்ய கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பிக்கிறோம், கீழமை நீதிமன்றம் மீண்டும் விசாரித்து தீர்வு காண வேண்டும். எச்-1பி விசா வைத்திருப்போர் நிரந்தர குடியுரிமை பெற நீண்டகால தாமதம் ஆகிறது.

இந்தியர்கள் நிம்மதி
இதனால் வாழ்க்கை துணைகள் பணியாற்றவும் தடை விதித்தால், அது தனிப்பட்ட மற்றும் பொருளாதார சிக்கலுக்கு வழிவகுக்கும். அதன் விளைவாக அமெரிக்க நிறுவனங்கள் திறமை வாய்ந்த தொழிலாளர்களை தக்க வைத்துக் கொள்வதில் இடையூறுகள் ஏற்படும்" என்று நீதிமன்றம் கூறியுள்ளது. கொலம்பியா நீதிமன்ற உத்தரவு, எச்1பி விசா வைத்திருப்போரின் வாழ்க்கை துணைகளுக்கு ஆறுதல் அளித்திருக்கும். ஏனெனில் எச்-4 விசா மூலம் . ஒரு லட்சம் இந்திய பெண்கள் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications