அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு 3வது முறையாக தேர்வானார் தமிழர் ராஜா கிருஷ்ணமூர்த்தி
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜனநாயக வேட்பாளார் ராஜா கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வாஷிங்டன்: இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான ராஜா கிருஷ்ணமூர்த்தி அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இல்லினாய்ஸ் மாகாணத்தில் போட்டியிட்ட ராஜா கிருஷ்ணமூர்த்தி தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் பிரஸ்டன் நெல்சனை எளிதில் தோற்கடித்தார். மொத்த வாக்குகளில் கிட்டத்தட்ட 71 சதவிகிதம் பெற்றுள்ளார். இவர் தமிழ்நாட்டில் ராஜபாளையத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.
ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஓபாமா போட்டியிட்ட போது அவரால் முன்மொழியப்பட்டவர் ராஜாகிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து 3வது முறையாக அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாகியுள்ளார்.

1973ஆம் ஆண்டு டெல்லியில் ஜூலை 19ஆம் தேதி பிறந்த ராஜா கிருஷ்ணமூர்த்தியின் பெற்றோர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அப்பா ராஜபாளையம். அம்மா தஞ்சாவூர். இவரது மனைவியும் தமிழ்நாடுதான். அப்பா சுப்பிரமணியம் டெல்லியில் வேலை பார்த்தவர். அமெரிக்காவில் பேராசிரியர் பணி கிடைக்க, அங்கேயே செட்டிலாகி விட்டனர். கிருஷ்ணமூர்த்தியின் முன்னாள் உள்ள ராஜா' ராஜபாளையத்தைக் குறிக்கும்.
நியூயார்க்கில் பெற்றோர்களுடன் குடியேறிய கிருஷ்ணமூர்த்தி சிவானந்தன் ஆய்வகம் மற்றும் மருத்துவமனையின் பொறுப்பாளராக பணியாற்றிய போது அரசியலில் ஈடுபட்டார். கடந்த 2004ஆம் ஆண்டு ஒபாமாவின் செனட் பிரசாரத்தின் ஆலோசகராக பணியாற்றியுள்ளார். 2008ஆம் ஆண்டு ஓபாமாவின் தனி ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார் ராஜா கிருஷ்ணமூர்த்தி. 2007 முதல் 2009ஆம் ஆண்டு வரை இல்லினாய்ஸ் மாகாணத்தின் துணை நிதியமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்துக்காரர் என்பதோடு ஒபாமாவின் நண்பர். கடந்த முறை போட்டியிட்ட போது டிரம்ப் அலையையும் மீறி வெற்றி பெற்றார். இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் பராக் ஒபாமாவின் தொகுதியான இல்லினாய்ஸ் மாகாணத்தில் வெற்றிபெற்று அசத்தியிருக்கிறார் ராஜா கிருஷ்ணமூர்த்தி.












Click it and Unblock the Notifications