கனடா தூதர்கள் வெளியேறியது கவலையளிக்கிறது.. விதிகளை இந்தியா பின்பற்றும் என நம்புகிறோம்.. அமெரிக்கா
வாஷிங்டன்: தூதரக ஊழியர்களின் பாதுகாப்பு உரிமை பறிக்கப்படும் என இந்தியா எச்சரித்து இருந்த நிலையில், 41 தூதரக அதிகாரிகளை கனடா திரும்ப பெற்றது. இது தொடர்பாக கவலை தெரிவித்துள்ள அமெரிக்கா, இந்தியா வியன்னா உடன்படிக்கையின் படி செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீர்ப் சிங் நிஜார் கடந்த மாதம் ஜூன் 18 ஆம் தேதி கனடாவில் உள்ள பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள குருத்வாரா அருகே மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில், இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். ஆனால், இது தொடர்பான ஆதாரங்கள் எதையும் அளிக்காமல் இப்படி ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாது இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்தது.

ஹர்திப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தால் இந்தியா - கனடா இடையேயான உறவு முன்னெப்போதும் இல்லாத அளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்த கனடா, தங்கள் நாட்டில் இருந்த இந்திய தூதரை கனடா வெளியேற்றியது. இதற்கு பதிலடி நடவடிக்கையாக கனடா தூதரக அதிகாரியை நாட்டைவிட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது.
41 தூதரக அதிகாரிகள்: இதனால் இந்தியா - கனடா இடையேயான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கனடா நாட்டினருக்கு விசா வழங்குவததை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. தொடர்ந்து இந்தியாவை வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் ஜஸ்டின் ட்ரூடோ விமர்சித்துக் கொண்டே இருந்தார். இந்த நிலையில், இந்தியாவில் பணியாற்றும் 41 கனடா தூதரக அதிகாரிகளை திரும்ப பெறுமாறு கனடாவிற்கு இந்தியா அறிவுறுத்தியது.
அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் தூதர்களை திரும்பப்பெற வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில் கனடா திரும்ப பெறவில்லை. இதனால், அக்டோபர் 20-ந் தேதிக்கு பிறகு 41 தூதரக அதிகாரிகளின் தூதரக பாதுகாப்பு உரிமை பறிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்து இருந்தது. மத்திய அரசு விதித்த கெடு முடிவடைய இருந்த நிலையில், இந்தியாவில் பணியாற்றி வந்த 41 தூதரக அதிகாரிகள் கனடா திரும்பி சென்றனர்.
வியன்னா உடன்படிக்கை: தொடர்ந்து இந்தியாவின் நடவடிக்கை ஒரு தலைபட்சமானது எனவும் கனடா சாடியிருந்தது. இதற்கிடையே பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்துள்ளார். கனடா தூதர்கள் மீதான இந்திய அரசின் நடவடிக்கை இரு நாடுகளிலும் உள்ள லட்சக் கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கையைக் கடினமாக்குகிறது என்று தெரிவித்தார்.
இந்தியாவில் இருக்கும் 41 தூதரக அதிகாரிகள் வாபஸ் பெற்ற நிலையில், ட்ரூடோ இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கனடா தூதரக அதிகாரிகளை இந்தியா வெளியேற்றியது தொடர்பாக அமெரிக்கா தனது கவலையை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா கூறுகையில், இந்தியா 1961 ஆம் ஆண்டின் வியன்னா உடன்படிக்கையை பின்பற்றுவதை உறுதி செய்யும் என்று நம்புவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications