அவங்கள அமெரிக்க மண்ணை மிதிக்க விடமாட்டோம்... பத்திரிக்கையாளர் கஷோகி கொலை.. பைடன் அரசு அதிரடி
வாஷிங்டன்: செய்தியாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக ரகசிய ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, சவுதி நாட்டை சேர்ந்த 76 பேருக்கு விசா தடை விதித்து அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
துருக்கி நாட்டில் அமைந்துள்ள சவுதி தூதரகத்தில் வைத்து வாஷிங்டன் போஸ்ட் செய்தியாளர் ஜமால் கஷோகி கடந்த 2018ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். அமெரிக்க அரசு இது தொடர்பான முக்கிய ஆவணங்களை இன்று வெளியிட்டது.
அதில் துருக்கியில் ஜமால் கஷோகியை கொல்லும் ஆப்ரேசனுக்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், முகமது பின் சல்மானின் ஒப்புதல் இல்லாமல் இந்த படுகொலை நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

கஷோகி சட்டம்
பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர். அவரது கொலைக்கும் சவுதி அரசுக்கும் நேரடி தொடர்பு இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து கடும் கோபத்தில் அமெரிக்கா உள்ளது. மேலும், கொலை செய்யப்பட்ட கஷோகியை கவுரப்படுத்தும் வகையில் கஷோகி சட்டம் என்ற சட்டத்தையும் அமெரிக்கா தற்போது அமல்படுத்தியுள்ளது.

76 பேருக்கு தடை
அதன்படி சவுதி அரேபியா நாட்டைச் சேர்ந்த 76 பேருக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்படுகிறது. அவர்களின் விசா விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட மாட்டாது என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது. கஷோகி படுகொலைக்குக் காரணமானவர் நிச்சயம் பதில் சொல்லியே தீர வேண்டும் என்றும் இது தொடர்பான குற்றவாளிகள் யாரும் அமெரிக்க மண்ணில் அனுமதிக்கக் கூடாது என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இளவரசருக்கும் தடை
சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் இந்தத் தடை பொருந்துமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர், "தற்போது தடை செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியலில் அவர் இல்லை. பொதுவாக, ஒரு நாட்டின் உச்சபட்ச பொறுப்பில் இருப்பவர்களுக்கு அமெரிக்கா தடை விதிக்காது" என்று அவர் கூறினார். பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், சவுதி நாட்டின் துணைப் பிரதமராகவும் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சவுதி மறுப்பு
ஆனால், அமெரிக்க உளவு துறையின் இந்த அறிக்கையைச் சவுதி அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலை தொடர்பாக அமெரிக்கா பொய்யான ஏற்கமுடியாத அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சவுதி அரசு குறித்து தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அந்த அறிக்கை முடிவுகள் ஏற்றுக்கொள்ள தக்க வகையில் இல்லை" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications