இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு... அமெரிக்காவில் போராட்டம்!
வாஷிங்டன்: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவில் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவில் தங்கள் உரிமைகளுக்காக அமைதியாக போராடும் விவசாயிகளுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என அவர்கள் வலியறுத்தி உள்ளனர்.

மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த 26 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், தலைவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.வெளிநாட்டில் இருந்தும் அவர்களுக்கு ஆதரவு குரல் எழுந்துள்ளது. கனடா பிரதமர் ஆதரவு கொடுத்தார். ஐநாவும் ஆதரவு கொடுத்தது. மற்ற நாடுகளிலும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவிலும் நமது விவசாயிகளுக்கு ஆதரவாக வக்கீல்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களது உரிமைகளுக்காக அமைதியாக போராடி வரும் விவசாயிகளுக்கு போராட்ட அனுமதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் கூறுகையில், "இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. தங்கள் நாட்டின் மக்கள் அமைதியான முறையில் எதிர்ப்பை அனுமதிக்க அவர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கான உரிமையை இந்தியா நிலைநிறுத்த வேண்டும். அவர்களின் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இந்திய விவசாயிகள் ஒற்றுமையை, அவர்களின் போராட்டத்தை ஆதரிக்கிறோம் என அவர்கள் கூறியுளளனர்.












Click it and Unblock the Notifications