டிரம்பால் வந்த வினை..40 இடங்களில் 500க்கும் அதிகமான விமானங்கள் ரத்து.. முடங்கியது அமெரிக்கா..பின்னணி
வாஷிங்டன்: அமெரிக்க அரசு முடங்கி உள்ளது. அமெரிக்க அரசின் நிதி முடக்கநிலையால் ஊதியமின்றி ஊழியர்கள் கட்டாய விடுப்பில் சென்றுள்ளனர். இதனால் முக்கிய துறைகளின் சேவைகள் ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில் தான் இன்று 40 விமான நிலையங்களில் இருந்து 500க்கும் அதிகமான விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் செயல்பட்டு வருகிறார். உலக நாடுகள் மீது வரி விதிப்பது, அமெரிக்காவின் குடியேற்ற சட்டத்தில் கடுமை காட்டுவது, எச் 1பி விசா கட்டணத்தை உயர்த்தியது என்று பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு ஒருதரப்பினர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இன்னொரு தரப்பினர் டிரம்பின் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அடுத்த நிதியாண்டுக்கு தேவையான நிதியை விடுவிப்பதில் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு நிதிவிடுவிப்பு தடைபட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் நிதி முடக்கம் தொடங்கியது. தற்போது ஒரு மாதத்தை கடந்தும் நிலைமை சரியாகவில்லை.
இதையடுத்து, அரசின் முக்கிய துறைகள் அனைத்தும் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் பணியாளர்கள் ஊதியமின்றி பணியாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ஊழியர்களில் ஒரு தரப்பினர் விடுப்பில் சென்றுள்ளனர். அரசு துறைகளுக்கு செலவழிக்க பணம் வழங்கப்படாததே இதற்கு முக்கிய காரணமாகும்.
அமெரிக்காவில் நிதி முடக்கத்தால் 6.70 லட்சம் அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் உள்ளதாகவும், 7.30 லட்சம் பேர் ஊதியமின்றி பணிபுரிவதாக சொல்லப்படுகிறது. இதனால் அமெரிக்காவில் பல்வேறு சேவைகள் முடங்கி உள்ளது. குறிப்பாக விமான சேவையும் முடங்கி உள்ளது. அதன்படி இன்று மட்டும் மொத்தம் 500க்கும் அதிகமான விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நியூயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்பட 40 விமான நிலையங்களில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முக்கிய காரணம் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பணிக்கு வராமல் இருப்பது தான். இதனால் நாடு முழுவதும் 10 சதவீதம் அளவுக்கு விமான போக்குவரத்தை குறைக்க அமெரிக்க விமான போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. இந்த நிலை நீடிக்கும் பட்சத்தில் அமெரிக்க மக்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்திப்பார்கள். இதனால் டிரம்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனை FlightAware இணையதளம் உறுதி செய்துள்ளது. இதுபற்றி அந்த இணையதளம், ‛‛நவம்பர் 7 ம் தேதி 500க்கும் அதிகமான விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 6ம் தேதியில் இருந்தே விமான சேவைகள் தொடர்ந்து ரத்தாகி வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஈரானின் கதை முடிந்தது... 3 வார போரை முடிக்கப்போகிறோம்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு -
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்? -
வினாடிக்கு ரூ.21.36 லட்சம் காலி.. ஈரான் போரில் அமெரிக்காவின் செலவு என்ன? வாய்ப்பிளக்க வைக்கும் நம்பர் -
'நேட்டோ' வெறும் காகித புலி! நாங்க இல்லாம ஒன்னுமே இல்லை.. கடுமையாக சாடிய டிரம்ப்! -
ஆடிப்போன அமெரிக்கா! சத்தமின்றி பாகிஸ்தான் செய்த காரியம்.. ஈரான் போருக்கு நடுவே இது வேறயா -
சக்ஸஸ்.. முழு பவரையும் காட்டிய ஈரான்! இஸ்ரேலுக்குள் சரமாரியாக பாய்ந்த ஏவுகணைகள்! திணறிய நெதன்யாகு! -
பெரிதாகும் போர்? அமெரிக்காவுக்கு ஆதரவாக உள்ளே வரும் பிரிட்டன்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்! -
லூப்பில் சிக்கிய ஈரான்! 1 கோடி கரன்சி நோட்டு அச்சடிப்பு.. ஆனா இந்திய ரூபாயில் இவ்வளவுதான் மதிப்பு -
ஈரான் அணுசக்தி மையத்தை குறி வைத்த அமெரிக்கா! ருத்ர தாண்டவம் ஆடிய டிரம்ப்! -
அமீரகத்தில் குண்டு விழுந்தால் அமெரிக்கா அலறுவது ஏன்.. ஈரான் கையில் எடுத்துள்ள பகீர் திட்டம்! -
112 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. தங்கம் மற்றும் பெட்ரோல் விலையில் அடுத்த அதிரடி மாற்றம் என்ன? -
முரண்டு பிடிக்கும் டிரம்ப்.. எதிர்பாராத நேரத்தில் அமெரிக்காவுக்கு ரஷ்யா அனுப்பிய டீல்? என்ன மேட்டர்












Click it and Unblock the Notifications