வடகொரியாவில் நுழைந்து மீனவர்களை கொன்ற அமெரிக்க கடற்படை! நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்
வாஷிங்டன்: கடந்த 2019ம் ஆண்டு அமெரிக்காவுக்கும்-வடகொரியாவுக்கும் இடையே அணு ஆயுதங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த நேரத்தில் அமெரிக்க கடற்படை வீரர்கள் ரகசிய ஒட்டுக்கேட்பு கருவியை வடகொரியாவுக்குள் பொருத்த ஊடுருவினார்கள் என்றும், அந்த சமயத்தில் வடகொரிய மீனவர்களை கொன்றார்கள் என்றும் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.
பெயர் வெளியிடப்படாத சில ஆதாரங்களை மேற்கோள்காட்டி, இந்தச் செய்தி வெளியிடப்பட்டது. தற்போது பதவியில் இருக்கும் மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த ஆதாரங்கள், இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள விவரங்களை அறிந்தவர்கள் என்றும் இந்த செய்தி ஊடகம் கூறுகிறது.

அதிபர் டொனால்ட் ட்ரம்ப், முதன் முறையாக பதவியேற்றபோது இந்த நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்ததாக அந்த நியூயார்க் டைம்ஸ் கூறியிருக்கிறது. அப்போது அவர் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்தச் செய்தி குறித்து ட்ரம்பிடம் கேட்டபோது, "இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. இப்போழுதுதான் இதை நான் முதன்முறையாகக் கேள்விப்படுகிறேன்" என்று நழுவி விட்டார்.
கடற்படை வீரர்கள் இரவில் கரைக்கு வந்து இறங்கும்போது, கடல் உணவுக்காக வந்த மீனவர்களை எதிர்பாராத விதமாக அவர்களை எதிர்கொண்டதாக தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்தது. அமெரிக்கப் படைகள் துப்பாக்கிச்சூடு நடத்தி, அந்தச் சிறிய மீன்பிடிப் படகில் இருந்த அனைவரையும் கொன்றதாக அந்த அறிக்கை கூறியது. பலியானவர்களின் எண்ணிக்கை குறித்து அதில் குறிப்பிடப்படவில்லை.
பின்னாளில் நடந்த ஒரு இரகசிய பென்டகன் மதிப்பாய்வு, இந்த கொலைகள் போர் விதிகள்படி நியாயப்படுத்தப்பட்டவை என்று முடிவுக்கு வந்ததாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்கக் கோரியதற்கு பென்டகன் இன்னும் பதிலளிக்கவில்லை.
அமெரிக்க புலனாய்வுக் குழுவில் உள்ள ஜனநாயகக் கட்சியான அமெரிக்க செனட்டர் மார்க் வார்னர், தி நியூயார்க் டைம்ஸ் அறிக்கையில் உள்ள எந்தவொரு தகவலையும் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ முடியாது என்று கூறியுள்ளார். அப்படியெனில் உண்மையிலேயே இந்த படுகொலையை அமெரிக்கா செய்ததா? என்று கேள்வி எழுகிறது.
-
பலமாக அடி வாங்கிய அமெரிக்கா! ரவுண்டு கட்டும் ஈரான்.. F-15 போர் விமானத்தின் நிலையை பாருங்க -
ஈரானின் கதை முடிந்தது... 3 வார போரை முடிக்கப்போகிறோம்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு -
முரண்டு பிடிக்கும் டிரம்ப்.. எதிர்பாராத நேரத்தில் அமெரிக்காவுக்கு ரஷ்யா அனுப்பிய டீல்? என்ன மேட்டர் -
112 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. தங்கம் மற்றும் பெட்ரோல் விலையில் அடுத்த அதிரடி மாற்றம் என்ன? -
டிரம்புக்கு மூக்குடைப்பு. ஈரானை தாக்க தயாரான. அமெரிக்கா போர் விமானங்களை விரட்டியடித்த இலங்கை! -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
பெரிதாகும் போர்? அமெரிக்காவுக்கு ஆதரவாக உள்ளே வரும் பிரிட்டன்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்! -
லூப்பில் சிக்கிய ஈரான்! 1 கோடி கரன்சி நோட்டு அச்சடிப்பு.. ஆனா இந்திய ரூபாயில் இவ்வளவுதான் மதிப்பு -
ஈரான் அதிபருக்கு போன் போட்ட பிரதமர் மோடி! போருக்கு நடுவே முக்கிய ஆலோசனை! எரிவாயு நெருக்கடி குறையுமா? -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை! -
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்? -
ஈரான் அணுசக்தி மையத்தை குறி வைத்த அமெரிக்கா! ருத்ர தாண்டவம் ஆடிய டிரம்ப்!












Click it and Unblock the Notifications