டொனால்டு டிரம்ப் விதித்த கூடுதல் வரிகள் ரத்து.. அமெரிக்கா உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு!
வாஷிங்டன்: சீனா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த கூடுதல் வரிகளுக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தை மீறி சிறப்பு அதிகாரம் மூலமாக டிரம்ப் கூடுதல் இறக்குமதி வரியை விதித்திருந்தார். தற்போது இந்த வரி சட்டவிரோதம் என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு தடை விதித்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்புக்கு வந்த பின், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேசிய அவசர சட்டத்தின் கீழ் ரெசிப்ரோக்கல் வரிகள் கொண்டு வரப்பட்டன. இதன் காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகள் பாதிப்புகளை சந்தித்தது. இந்தியா, சீனா, கனடா உள்ளிட்ட நாடுகள் மீது வர்த்தக பற்றாக்குறையை காரணமாக கூறி வரிகளை விதித்தார். இதற்கு பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் அமெரிக்கா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து பல்வேறு கட்ட விசாரணைகள் நடந்தன. இந்த நிலையில் அமெரிக்கா உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இதன்படி 9 நீதிபதிகள் அடங்கிய பெஞ்சில் 6 பேர் டிரம்ப் உத்தரவுக்கு எதிராகவும், 3 நீதிபதிகள் டிரம்ப் உத்தரவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர்.
இதனால் 6 - 3 என்ற வாக்கெடுப்பில் கீழ் அதிபர் டிரம்ப் அறிவித்த ரெசிப்ரோக்கல் வரி செல்லாது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா கீழமை நீதிமன்றம் டிரம்ப் விதித்த ரெசிப்ரோக்கல் வரிகள் அனைத்து சட்டவிரோதமானவதை என்று கூறி தீர்ப்பு அளித்திருந்தது. தற்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு டொனால்டு டிரம்ப்க்கு பேரிடியாக அமைந்துள்ளது.
அதேபோல் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு டிரம்ப் விதித்த மற்ற வரிகளை பாதிக்காது என்றும், அமெரிக்காவின் சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட வரிகளை மட்டுமே ரத்து செய்யும் என்று கூறப்படுகிறது. நீதிபதிகள் தங்களின் உத்தரவில், அமெரிக்கா சட்டமான சர்வதேச அவசர நிலை பொருளாதார சட்டத்தின்படி வரி விதிக்க டிரம்புக்கு அதிகாரம் இல்லை.
அமெரிக்கா சட்டப்படி வரி விதிக்க நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஸ்டீல், அலுமினியம் போன்ற துறை சார்ந்த வரிகளை பாதிக்காது என்றும் தெரிகிறது. இதனால் டிரம்ப் அடுத்தக் கட்டமாக என்ன செய்வார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications