இனி ஆன்லைன் வகுப்புகள்தான்.. இந்தியர்கள் உட்பட வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற்றப்படும் அபாயம்
வாஷிங்டன்: கொரோனா சிக்கலால் அமெரிக்காவில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் நிலை உருவாகி உள்ளது.
கொரோனா தொற்று நோய் அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் 30,40,833 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 1,32,979 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

இத்தகைய பேரழிவை தொடர்ந்து அமெரிக்காவில் கல்வி நிறுவனங்கள் வகுப்புகளை தொடங்குவது குறித்து எதுவும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில், அனைத்து வகுப்புகளையும் ஆன்லைன் முறைக்கு மாற்ற உள்ளதாக அமெரிக்கா பல்கலைக் கழகங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் வெளிநாடுகளில் இருந்து கல்வி கற்க மாணவர்கள் வருவதற்கான விசா இனி வழங்கப்பட மாட்டாது என US Immigration and Customs Enforcement (ICE) தெரிவித்திருக்கிறது. இதனால் இந்திய மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் பாதிப்புக்குள்ளாவார்கள்.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பால் அமெரிக்காவில் கல்வி பயின்று வரும் வெளிநாட்டு மாணவர்கள் அந்த நாட்டில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது அல்லது அவர்கள் படித்து வரும் பல்கலைக் கழகங்களால் வெளியேற்றப்படும் சூழ்நிலை உருவாகும்.
அமெரிக்காவில் இந்தியா, சீனா, தென்கொரியா, செளதி அரேபியா மற்றும் கனடா நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் கல்வி கற்று வருகின்றனர். இதற்காக மட்டுமே அமெரிக்காவில் தங்கியும் உள்ளனர்.
உதாரணமாக ஹார்வார்டு பல்கலைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில், பல்கலைக் கழக வளாகத்தில் தங்கி இருக்கும் மாணவர்கள் உட்பட அனைவருக்கும் அனைத்து பாடங்களும் இனி ஆன்லைனில் மட்டுமே நடத்தப்படும் என அறிவித்திருக்கிறது. இதனால் இயல்பாகவே வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவின் பல்கலைக் கழகங்களை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இது அமெரிக்கா வாழ் இந்திய மாணவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானம்.. விமானிகளின் நிலை என்ன? ஷாக் தகவல்! -
அமெரிக்காவுக்கு அடிமேல் அடி! சக்தி வாய்ந்த போர் விமானத்திற்கு நேர்ந்த கதி.. கெத்து காட்டும் ஈரான்! -
7 போர் விமானங்களை இழந்த அமெரிக்கா.. ஈரான் உடனான சண்டையில் மொத்தமா போச்சு! -
ஈரானை பார்த்து நடுங்கிய டிரம்ப்.. 2 சொந்த போர் விமானத்தையும் சுட்டு வீழ்த்திய அமெரிக்கா.. என்ன நடந்தது? -
ஈரான் கண்ணில் மண்ணை தூவிய அமெரிக்கா.. டீப் பகுதிக்குள் சென்று வீரரை மீட்டது எப்படி? ஹாலிவுட் படத்தை மிஞ்சும் சம்பவம் -
"ஒரு நிமிடம் 2 டிரோன்கள்.." அமெரிக்க உளவு துறை அலுவலகத்தை காலி செய்த ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
“எங்கள் கைதியாக இருப்பதே உங்க பையனுக்கு பாதுகாப்பு!” அமெரிக்க விமானியின் தாய்க்கு ஈரான் மெசேஜ் -
ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்காமல் நைசாக நழுவிய இந்திய கப்பல்.. புதிய ரூட்டை பிடித்து பயணம்! ஆஹா -
விடிய விடிய தேடுதல்.. ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஜெட் விமானத்தின் பைலைட் மீட்பு! அமெரிக்கா நிம்மதி -
"48 மணி நேரம் டைம்.. ஈரான் மீது நரகமே இறங்க போகுது.." அமெரிக்க அதிபர் டிரம்ப் இறுதி எச்சரிக்கை -
ஹார்முஸ் ஜலசந்தியில் நிற்கும் 3200 எண்ணெய் கப்பல்கள்.. 20 ஆயிரம் பணியாளர்கள் குடிநீர் இல்லாமல் அவதி -
கண்கள் சிவந்த டிரம்ப்.. அமெரிக்க ராணுவ தளபதி அதிரடியாக நீக்கம்! ஈரான் போரில் தடுமாறுவது தான் காரணம்?












Click it and Unblock the Notifications