இனி ஆன்லைன் வகுப்புகள்தான்.. இந்தியர்கள் உட்பட வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற்றப்படும் அபாயம்
வாஷிங்டன்: கொரோனா சிக்கலால் அமெரிக்காவில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் நிலை உருவாகி உள்ளது.
கொரோனா தொற்று நோய் அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் 30,40,833 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 1,32,979 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

இத்தகைய பேரழிவை தொடர்ந்து அமெரிக்காவில் கல்வி நிறுவனங்கள் வகுப்புகளை தொடங்குவது குறித்து எதுவும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில், அனைத்து வகுப்புகளையும் ஆன்லைன் முறைக்கு மாற்ற உள்ளதாக அமெரிக்கா பல்கலைக் கழகங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் வெளிநாடுகளில் இருந்து கல்வி கற்க மாணவர்கள் வருவதற்கான விசா இனி வழங்கப்பட மாட்டாது என US Immigration and Customs Enforcement (ICE) தெரிவித்திருக்கிறது. இதனால் இந்திய மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் பாதிப்புக்குள்ளாவார்கள்.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பால் அமெரிக்காவில் கல்வி பயின்று வரும் வெளிநாட்டு மாணவர்கள் அந்த நாட்டில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது அல்லது அவர்கள் படித்து வரும் பல்கலைக் கழகங்களால் வெளியேற்றப்படும் சூழ்நிலை உருவாகும்.
அமெரிக்காவில் இந்தியா, சீனா, தென்கொரியா, செளதி அரேபியா மற்றும் கனடா நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் கல்வி கற்று வருகின்றனர். இதற்காக மட்டுமே அமெரிக்காவில் தங்கியும் உள்ளனர்.
உதாரணமாக ஹார்வார்டு பல்கலைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில், பல்கலைக் கழக வளாகத்தில் தங்கி இருக்கும் மாணவர்கள் உட்பட அனைவருக்கும் அனைத்து பாடங்களும் இனி ஆன்லைனில் மட்டுமே நடத்தப்படும் என அறிவித்திருக்கிறது. இதனால் இயல்பாகவே வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவின் பல்கலைக் கழகங்களை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இது அமெரிக்கா வாழ் இந்திய மாணவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications