சூப்பர்! அமெரிக்கா செல்வோருக்கு ஜாக்பாட்.! விசா நடைமுறையில் தளர்வுகள்.. எப்போது வரை இருக்கும்?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்கச் செல்லும் இந்தியர்களுக்கு நற்செய்தியாக விசா தொடர்பாக அமெரிக்க அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. ஐடி துறையில் இந்தியர்கள் சிறந்து விளங்குவதால், அவர்களை அமெரிக்கா அப்படியே அள்ளிக்கொள்கிறது.

இந்தச் சூழலில் வரும் டிச. 31ஆம் தேதி வரை மாணவர்கள் உள்ளிட்ட சில தரப்பினருக்கு விசா வழங்கும் முறைகளில் அமெரிக்க சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

தளர்வுகள்

தளர்வுகள்

இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல விசா கோரி விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் தேவையில்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விசா விண்ணப்பதாரர்களுக்கு இது மிகவும் அவசியமான ஒன்று என்றும் இது எந்தவொரு கவலையின்றி இந்தியர்கள் அமெரிக்கா வர உதவும் என்றும் தெற்காசிய மக்களுக்கான ஜோ பைடனின் ஆலோசகர் அஜய் ஜெயின் பூடோரியா தெரிவித்துள்ளார்.

யாருக்கு

யாருக்கு

இதன் மூலம் மாணவர்கள், ஊழியர்கள், தூதரக பணி நிமித்தமாக அமெரிக்கா செல்லும் பணியாளர்களுக்கு விசா நேர்காணல் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த அறிவிற்கு மாணவர்கள் (F, M, மற்றும் கல்வி J விசா கோரி விண்ணப்பித்தவர்கள்), பணியாளர்கள் (H-1, H-2, H-3, தனிப்பட்ட L விசாக்கள்), கலாசரம் விசா (O, P, மற்றும் Q விசாக்கள்) கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்குப் பொருந்தும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

 கட்டுப்பாடுகள்

கட்டுப்பாடுகள்

அதேநேரம் இதற்கு சில கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த குறிப்பிட்ட பிரிவுகளில் விசா கோரி விண்ணப்பிப்பவர்கள், முந்தைய காலங்களில் எதேனும் ஒரு பிரிவில் அமெரிக்க விசா பெற்றவராக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் எந்தவொரு காரணத்திற்காகவும் அமெரிக்க விசா அந்த நபருக்கு மறுக்கப்பட்டு இருக்கக் கூடாது. விசா கோரி விண்ணப்பிக்கும் நபர் இந்தியாவில் குடியுரிமை பெற்று இருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உதவும்

உதவும்

அமெரிக்காவின் இந்த அறிவிப்பு மூலம் இந்தியாவில் இருந்து விசா விண்ணப்பதாரர்களில் சுமார் 20 ஆயிரம் பேர் வரை பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஆசிய அமெரிக்கர்களுக்கான ஆலோசகர் அஜய் ஜெயின் பூட்டோரியா, தென் மத்திய ஆசியாவிற்கான உதவி வெளியுறவுச் செயலர் டொனால் லுவை சந்தித்த பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு மேம்படும் என்றும் அஜய் ஜெயின் பூடோரியா தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+