உபரியாக உள்ள ஆஸ்ட்ராஜெனிக்கா தடுப்பு மருந்தை இந்தியாவுக்கு அனுப்ப பரிசீலனை.. அமெரிக்கா
வாஷிங்டன்: கூடுதலாக உள்ள ஆஸ்ட்ராஜெனிக்கா தடுப்பூசியை இந்தியாவுக்கு கொடுப்பது குறித்து அமெரிக்கா பரிசீலனை செய்யும் என அந்நாட்டின் கொரோனா தடுப்பு தொற்றுநோய் தடுப்பு ஆலோசகர் ஆன்டனி பவுசி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். தினந்தோறும் லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள்.

ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் ஏராளமானோர் உயிரிழக்கிறார்கள். அதிகரித்து வரும் நோயாளிகளை அனுமதிக்க படுக்கை இன்றியும், இறக்கும் நோயாளிகளை தகனம் செய்ய இடமின்றியும் இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்கள் தவித்து வருகின்றன.
இந்தியாவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் டெல்லியாகும். இங்கு 1.3 பில்லியன் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஆகியவற்றை சுட்டிக் காட்டி நோயாளிகளின் குடும்பத்தினர் சமூகவலைதளங்களில் உதவி கேட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் உலகளவில் கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 1 பில்லியனை தாண்டினாலும் கடந்த சில தினங்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து மேற்கத்திய நாடுகளான பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளன.
அது போல் அமெரிக்காவும் இந்தியாவுக்கு உறுதுணையாக இருப்போம் என தெரிவித்துள்ளது. இந்தநிலையில் அமெரிக்காவின் கொரோனா நோய்த் தடுப்பு ஆலோசகர் ஆன்டனி பவுசி கூறுகையில் மிகவும் குறைந்த விலையான ஆஸ்ட்ராஜெனிக்கா தடுப்பூசி அமெரிக்காவில் 30 மில்லியன் டோஸ்கள் உள்ளன.
கூடுதலாக உள்ள இந்த தடுப்பூசி டோஸ்களை இந்தியாவுக்கு அனுப்ப பரிசீலனை செய்கிறோம். மேலும் ஆக்ஸிஜன் விநியோகம், மருந்துகள், பிபிஇ கிட்கள் உள்ளிட்டவற்றில் உதவத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறோம் என பவுசி தெரிவித்துள்ளார்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications