Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கைதான வெனிசுலா அதிபரை அமெரிக்கா சும்மா விடாது.. எச்சரித்த எக்ஸ்பர்ட்.. என்ன நடக்கும்? பரபரப்பு தகவல்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: வெனிசுலாவுக்குள் நுழைந்து அந்த நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்கா படைகள் கைது செய்துள்ளது. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா விசாரணைக்கு உட்படுத்துவது உறுதி. இந்த நடவடிக்கை என்பது அமெரிக்காவை எதிரியாகப் பார்க்கும் அல்லது குற்றச் செயல்களில் தொடர்புள்ள அரசை அமெரிக்கா எப்படி கையாளும் என்பதற்காக சான்றாக கூறலாம். யாரும் குறை சொல்லக்கூடாது'' என்று புவிசார்ந்த அரசியல் நிபுணரும், ‛ஆரக்கள் அட்வைசரி' குழுமத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வரும் வ்லாடா கலன் ‛ஒன் இந்தியா'வுக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார்.

அமெரிக்கா - வெனிசுலா இடையே கடந்த சில வாரங்களாக மோதல் அதிகரித்தது. வெனிசுலாவில் இருந்து கடல் வழியாக அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும், அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக வெனிசுலாவை சேர்ந்தவர்கள் நுழைவதாகவும் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டி வந்தார்.

us-will-move-to-put-venezuelan-president-nicol-s-maduro-on-trial-says-oracle-advisory-group-vlada

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை கைது செய்ய உதவினால் வழங்கப்படும் பரிசுத்தொகையை ரூ.438 கோடியாக டிரம்ப் உயர்த்தி அறிவித்தார். ஆனால் அவரது முயற்சி கைக்கூடவில்லை. இந்நிலையில் தான் இன்று அமெரிக்க படைகள் நேரடியாக களமிறங்கியது.

வெனிசுலாவின் தலைநகர் கராகஸில் அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. அதன்பிறகு வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க படைகள் கைது செய்து நாடு கடத்தியது. ஒரு நாட்டின் அதிபரை அவரது நாட்டுக்குள்ளேயே சென்று அமெரிக்க படைகள் கைது செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது எளிதாக காரியம் கிடையாது. ஆனால் டொனால்ட் டிரம்ப் நிகழ்த்தி காட்டி உள்ளது.

டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு கியூபா உள்பட சில நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதேவேளையில் சில நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் தான் ‛ஒன் இந்தியா'வுக்கு புவிசார்ந்த அரசியல் நிபுணரும், ‛ஆரக்கள் அட்வைசரி' குழுமத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வரும் வ்லாடா கலன் சிறப்பு பேட்டி அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:

‛‛வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா விசாரணைக்கு உட்படுத்துவது உறுதி. அமெரிக்காவின் தற்போதைய நடவடிக்கை வெறும் அரசியல் அழுத்தம், அரசியல் தடைகளை தாண்டி, வெனிசுலாவில் உள்ள தற்போதைய ஆட்சியை கவிழ்க்கும் சட்ட மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை நோக்கிச் செல்கிறது.

நிகோலஸ் மதுரோவை எப்படி கைது செய்தார்கள் அல்லது சிறைப்பிடித்தார்கள் என்பது சட்டப்படி முக்கியம் இல்லை. கைது நடவடிக்கைகளை எப்படி செய்தார்கள் என்பதை விட அவர் மீதான குற்றச்சாட்டுகளில் தான் அமெரிக்கா கவனம் செலுத்தும். இந்த நடவடிக்கை என்பது அமெரிக்காவை எதிரியாகப் பார்க்கும் அல்லது குற்றச் செயல்களில் தொடர்புள்ள அரசை அமெரிக்கா எப்படி கையாளும் என்பதற்காக சான்றாக கூறலாம்.

நிகோலஸ் மதுரோவிலன் செயல்கள் அமெரிக்க நலன்களுக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தினால் அதுவே அவர் மீது வழக்கு தொடர சரியான காரணமாக இருக்கும். போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தல் கும்பல்களுடன் அவருக்குத் தொடர்பு இருப்பதாக நீண்டகாலமாக உள்ள குற்றச்சாட்டுகள் உள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் வெறும் பெயரளவுக்கு இல்லை. அது ஒரு பெரிய சட்ட அமலாக்கக் கொள்கையின் ஒரு பகுதியாக இருக்கிறது.

வெனிசுலாவில் நிறைய எண்ணெய் வளம் உள்ளது. ஆனால் அதற்காக அமெரிக்கா இப்படி செய்யவில்லை. அந்த நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்கா கைது நடவடிக்கையை எடுத்துள்ளது. போதைப்பொருள் கடத்தல், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவல் உள்ளிட்டவை தான் கைது நடவடிக்கைக்கு முக்கியமான காரணமாகும்.

நிகோலஸ் மதுரோ அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட உடன் புதிய இடைக்கால அரசு அமைக்கப்படும். இது அமெரிக்கா மற்றும் அண்டை நாடுகளுக்கு சாதகமான வகையில் இருக்கும். இருப்பினும் இந்த கைது நடவடிக்கை என்பது ஆட்சியை மாற்றும் முயற்சிக்காக மேற்கொள்ளப்படவில்லை. அதையும் தாண்டி அமெரிக்காவின் பாதுகாப்புக்காக செய்யப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவின் நடவடிக்கையை யாரும் கேள்வி கேட்கக்கூடாது'' என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+