விவேக் ராமசாமி சொன்னதை ஜீரணிச்சுக்க முடியல! இந்தியா மீது.. அமெரிக்க தொழிலதிபர் குற்றச்சாட்டு
வாஷிங்டன்: "இந்தியாவின் எழுத்தறிவு பற்றியும், சீனாவின் கணித திறன் குறித்தும் யாரும் எங்களுக்கு பாடம் எடுக்க தேவையில்லை. நாங்கள் அமெரிக்கர்கள், நாங்கள்தான் கெத்து" என்று அமெரிக்க நிறுவனத்தின் சிஇஓ ஒருவர் பேசியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த பேச்சு, இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமியின் கருத்துக்கு பதிலடியாக பார்க்கப்படுகிறது. அப்படி என்னதான் பேசினார் நம்மாளு விவேக் ராமசாமி?

கடந்த ஆண்டு H-1B விசா பற்றிய சர்ச்சைகள் அதிகரித்திருந்தபோது, "அமெரிக்க கலாச்சாரம் கொஞ்சம் வித்தியாசமானது. அது சிற்பானதை வியந்து பார்ப்பதற்கு பதில், சராசரியான விஷயத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. கணித ஒலிம்பியாட்டு போட்டிகளுக்கு (செஸ் ஒலிம்பியாட் போல) முக்கியத்துவம் கொடுப்பதற்கு பதில், 'ப்ரோம் குயினை' கொண்டாடுகிறது. இதனால்தான் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித துறையில் அமெரிக்கர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. எனவேதான் வெளிநாடுகளை சேர்ந்த ஊழியர்களை பணியில் அமர்த்த வேண்டிய தேவை எழுந்திருக்கிறது" என்று பேசியிருந்தார்.
ப்ரோம் குயின் என்றால் என்ன?
அமெரிக்க பள்ளிகளில் இறுதி ஆண்டில் நடைபெறும் ஆடம்பர விழாவில் 'ப்ரோம் குயின்' பட்டம் கொடுக்க மாணவி தேர்ந்தெடுக்கப்படுவார். பள்ளி மாணவர்களின் வாழ்க்கையில் இந்த விழா மிகுந்த முக்கியத்துவம் கொண்ட நிறைவு விழாவாகும். பிரபலமான, அழகான, சமூகத்தில் முக்கியத்துவம் கொண்ட மாணவியை, அனைத்து மாணவர்களும் வாக்களித்து தேர்வு செய்வார்கள். தேர்வு செய்யப்படும் மாணவி ப்ரோம் குயின் என்று அழைக்கப்படுவார். மாணவர்கள் பிரிவில் விளையாட்டில் சிறந்த மாணவனை தேர்வு செய்வார்கள். அவர் 'ப்ரோம் கிங்' என்று அழைக்கப்படுவார்.
அறிவு vs அழகு
அறிவுக்கு முக்கியத்துவம் அளித்து, அதில் சிறந்தவர்களை தேர்வு செய்வதற்கு பதில் அழகு மற்றும் இதர விஷயங்களில் முன்னணியில் உள்ள மாணவர்களை தேர்வு செய்வது, நாட்டின் வளர்ச்சிக்கு பயன் தராது என்பதுதான் விவேக் ராமசாமியின் வாதம். ஓராண்டுக்கு முன்னர் சொன்ன கருத்துக்கு, தற்போது பதில் கருத்தை தூக்கி வந்திருக்கிறார் அசோரியா நிறுவனத்தின் சிஇஓ ஜேம்ஸ். இவர் தொடர்ந்து H-1B விசா நடைமுறையை எதிர்த்து வருகிறார். வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் சுற்றுலாவுக்காக மட்டுமே அமெரிக்காவுக்குள் நுழைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா குறித்து பாடம்
இப்படி இருக்கையில் இன்று பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் குடியரசுக் கட்சியின் மாணவர் குழு விழாவில் அவர் பேசுகையில், "அமெரிக்கர்கள் தாங்கள் யார் என்பதற்காக மன்னிப்பு கேட்க தேவையில்லை. இந்தியாவின் எழுத்தறிவு பற்றியும், சீனாவின் கணித திறன் குறித்தும் யாரும் எங்களுக்கு பாடம் எடுக்க தேவையில்லை. நாங்கள் அமெரிக்கர்கள், நாங்கள்தான் கெத்து. கணித ஒலிம்பியாட் போட்டிக்காக அமெரிக்கர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயம் போகாமல் இருக்க மாட்டார்கள்.
வேதியியல் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக வெள்ளிக்கிழமை இரவு விளையாட்டு நிகழ்ச்சிகளை தவறவிட மாட்டார்கள். இதற்காக எல்லாம் அமெரிக்கர்கள் தங்கள் கலாச்சாரத்தை மாற்றிக்கொள்ள மாட்டார்கள்" என்று கூறியிருக்கிறார்.
கல்வியால் உயர்ந்த இந்தியர்கள்
கல்விதான் பொருளாதார ரீதியாக ஒருவரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என்பதை இந்தியர்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தின் மக்கள் கல்வியை ஆயுதமாக கொண்டு தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள். நாட்டையும் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்கிறார்கள். ஆனால் அதெல்லாம் கிடையாது என்று சொல்வதை போல இருக்கிறது ஜேம்ஸின் கருத்து என்று பலரும் கூறுகின்றனர்.
-
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும்












Click it and Unblock the Notifications