Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவுக்கு டிரம்ப் தரும் பெரிய ஆஃபர்.. 500 % வரி மிரட்டலுக்கு நடுவே பிரதமர் மோடி ஏற்பாரா?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: வெனிசுலாவின் கச்சா எண்ணெயை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. இந்நிலையில் தான் வெனிசுலாவில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்க தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி 500 சதவீத வரி விதிக்கும் மசோதாவுக்கு டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் வழங்கி உள்ள நிலையில் இந்த ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பிரதமர் மோடி ஏற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்கா உடனான வர்த்தக பற்றாக்குறை மற்றும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி தலா 25 சதவீதம் என்று மொத்தம் 50 சதவீத வரியை டொனால்ட் டிரம்ப் நமக்கு விதித்துள்ளார். இதனால் இருநாடுகள் இடையேயான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

we-are-ready-to-sell-venezuelan-oil-to-india-says-donald-trumps-white-house

இது போதாது என்று ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் உள்ளிட்ட வர்த்தகங்களை மேற்கொள்ளும் நாட்டுக்கு 500 சதவீத வரி விதிக்கும் மசோதாவுக்கு டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் வழங்கி உள்ளார். இது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் இந்தியாவும், சீனாவும் அதிகளவில் பாதிக்கப்படும்.

இந்நிலையில் தான் தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வெள்ளை மாளிகை முக்கிய தகவலை தெரிவித்துள்ளது. இதுபற்றி வெள்ளை மாளிகை அதிகாரி கூறுகையில், ‛‛அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள வெனிசுலாவின் கச்சா எண்ணெயை இந்தியா வாங்க தயாராக உள்ளது. நாங்களும் வெனிசுலா கச்சா எண்ணெயை அனுப்ப தயாராக உள்ளோம். இதற்கான அனுமதியை வழங்கவும் ரெடியாக இருக்கிறோம்.

அமெரிக்காவின் தடைகளால் முடக்கப்பட்ட வர்த்கத்தை இருநாடுகள் இடையே புதுப்பிக்கும் வகையில் இருக்கும். முன்னதாக அமெரிக்காவின் எரிசக்தி துறை அமைச்சர் கிறிஸ்டோஃபர் ரைட் இதனை உறுதி செய்திருந்தார். வெனிசுலாவின் கச்சா எண்ணெயை ஏறக்குறைய அனைத்து நாடுகளுக்கும் விற்பனை செய்ய தயாராக உள்ளோம் என்று அவர் கூறியிருந்தார்'' என்று தெரிவித்தார்.

உலகிலேயே எண்ணெய் வளம் அதிகம் கொண்ட நாடு வெனிசுலா தான். இந்த நாட்டில் இருந்து நம் நாடு அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது. இதற்கிடையே தான் அமெரிக்கா பல்வேறு தடைகளை வெனிசுலா மீது விதித்தது. இதையடுத்து நம் நாடு வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்தது. சமீபத்தில் வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை அதிகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.

ஆனால் அதற்குள் டொனால்ட் டிரம்ப் தனது படைகளை அனுப்பி வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை நாடு புகுந்து கைது செய்தார். நிகோலஸ் மதுரோ தற்போது நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வெனிசுலாவில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ள நிலையில் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை அமெரிக்கா மேற்கொள்ள உள்ளது. இந்நிலையில் தான் வெனிசுலாவின் கச்சா எண்ணெயை இந்தியாவுக்கு அனுப்ப தயாராக இருக்கிறோம் என்று வெள்ளை மாளிகையின் அதிகாரி கூறியுள்ளார்.

ஆனால் இந்த ஆஃபரை பிரதமர் மோடி ஏற்பாரா? என்பது தெரியவில்லை. ஏனென்றால் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து நம் நாட்டுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். எப்படியாவது ரஷ்யா - இந்தியா உறவை முறிக்க வேண்டும் என்று நினைக்கிறார். மேலும் 50 சதவீத வரி விதிப்புக்கு பிறகு இந்தியா - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதில் இன்னும் உடன்படவில்லை. பிரதமர் மோடி, டிரம்பிடம் இறங்கி செல்ல வேண்டும் என்று அவர் நினைக்கிறார். ஆனால் மோடி , டிரம்பின் அடாவடிக்கு பணியவில்லை.

இதனால் டிரம்ப்புக்கு, மோடி மீது கடும் கோபம் உள்ளது. இப்படியான சூழலில் அமெரிக்காவின் வழியாக வெனிசுலா வின் கச்சா எண்ணயை இந்தியாவுக்கு வழங்க தயார் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளதை மோடி ஏற்பாரா? என்பதை அறிய நாம் இனு்னும் சில காலம் காத்திருக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+