இந்த விஷயத்தில்...சீனாவுடன் உறவு வைக்கத் தயார்...டொனால்ட் ட்ரம்ப்!!
வாஷிங்டன்: கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை சீனா உள்பட முதலில் யார் கண்டுபிடித்தாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயாராக இருக்கிறோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா பரவலுக்கு சீனாதான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தார். ஒருபடி மேலே போய், சீன வைரஸ் என்றும் அழைத்து பீஜிங்கிற்கு நெருக்கடி கொடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த சீனா, ஆதாரம் இல்லாத இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை கண்டிக்கிறோம் என்று தெரிவித்து இருந்தது.

சீனா மீது அமெரிக்கா மேலும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை வைத்து இருந்தது. வுகானில் இருக்கும் பரிசோதனைக் கூடத்தில் இருந்துதான் வைரஸ் வெளியானது என்று இன்று வரை அமெரிக்க புலனாய்வு அமைப்பு கூறி வருகிறது.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜெர்மன் உள்பட 160 நாடுகளின் அழுத்ததுக்குப் பின்னர் வுகானுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பும் ஒப்புக் கொண்டது. இந்த நிலையில், அமெரிக்கா , சீனா, ரஷ்யா உள்பட சில நாடுகள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் இறுதிக் கட்டத்தில் உள்ளன.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு கட்டங்களைக் கடந்து மூன்றாம் கட்டத்திற்குள் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் சென்று இருக்கிறது. இரண்டாம் கட்ட ஆய்வில் மனிதர்களுக்கு பரிசோதனை அடிப்படையில் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து இருப்பதாக ஆக்ஸ்போர்டு பல்கலை தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் இதுகுறித்து பேட்டி அளித்து இருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ''கொரோனா தடுப்பு மருந்து ஆய்வில் நல்ல முன்னேற்றத்தை எட்டியுள்ளோம். இந்த முயற்சியில் சீனா உள்பட எந்த நாடுகளும் வெற்றி பெற்றால் அந்த நாடுகளுடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம்.
எதிர்பார்த்ததை விட விரைவில் தடுப்பு மருந்து அமெரிக்காவில் இருந்து மக்களுக்கு கிடைக்கும். இந்த மருந்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் ராணுவ வீரர்கள் உதவுவார்கள் '' என்று தெரிவித்துள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications