இந்தியாவில் நடப்பதை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.. போராட்டங்கள் குறித்து அமெரிக்கா பரபரப்பு
Recommended Video
வாஷிங்டன்: இந்தியாவில் நடந்து வரும் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்து நாங்கள் கண்காணித்து வருகிறோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தியாவில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த போராட்டங்களை உலக நாடுகள் பல உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் மூத்த வெளியுறவுத்துறை அதிகாரி கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து இந்தியாவில் வெளிப்படையாகவே நடந்துவரும் அரசியல் விவாதங்கள் மற்றும் பாராளுமன்றத்தில் கலந்துரையாடல்கள் மற்றும் நீதித்துறை செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் முழுமையாக அறிவோம். குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்து நாங்கள் கண்காணித்து வருகிறோம்.
இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள் மற்றும் நடைமுறைகளை நாங்கள் மதிக்கிறோம், சிறுபான்மை உரிமைகள், மத சுதந்திரம், மனித உரிமைகள் போன்றவை ஜனநாயக நாட்டின் முக்கியமான தூண்கள் என்ற உண்மையைப் பற்றியும் இந்தியாவுடன் பேச வேண்டும் என்றார்.

முன்னதாக நேற்று அமெரிக்கா சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க அரசின் பிரதிநிதிகளை சந்தித்து குடியுரிமை சட்டம் குறித்து விளக்கினார். இதுவரை அமெரிக்கா இந்தியாவில் நடந்து வரும் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை கண்டித்து வெளிப்படையாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. மாறாக இந்திய அரசு சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications