திடீரென அதிகரிக்கும் கொரோனா.. ஐசியூவில் படுக்கைகள் காலி.. கலங்கும் கலிபோர்னியா
வாஷிங்டன்: தேங்க்ஸ் கிவ்விங் விடுமுறையைத் தொடர்ந்து கலிபோர்னியா மாகாணத்தில் கொரோனா தொற்று மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது. அங்கு நோயாளிகளுக்கு ஐசியூ படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட பெட்கள் அனைத்துமே நிரம்பி விட்டதாக கலிபோர்னியா மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மிக மோசமான வேகத்தில் கொரோனா கலிபோர்னியாவில் பரவுகிறது என்கிறார், லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியின், பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர்.பர்பரா பெர்ரர்.
லாக்டவுன் மற்றும், தனிமைப்படுத்துதல் விதிமுறைகள் உள்ளூர் நிர்வாகம் கடுமைப்படுத்த ஆரம்பித்துள்ளது. ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசிகள் அங்கு செலுத்தப்பட்டு வந்தாலும், அது பலனளிக்க நேரமெடுக்கம் எனக் கூறப்படுகிறது.

லாக்டவுன்
2 வாரங்கள் முன்பு கலிபோர்னியாவில், லாக்டவுன் நடைமுறை அமலுக்கு வந்தது. இருப்பினும், வைரஸ் 2 வாரங்களுக்கு மேலும் உடலில் இருந்து பிறகு வெளிப்படும் தன்மை கொண்டது என்பதால், இப்போதைக்கு அதன் ரிசல்ட் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

நோய் பரவல்
நவம்பர் 1ம் தேதி, கலிபோர்னியாவில் 7 நாட்களின் சராசரியை எடுத்துப் பார்த்தால், 4,183 என்ற அளவில் இருந்தது. ஆனால், நேற்று முன்தினம், அது 38,774 என்ற அளவுக்கு அதிகரித்தது என்றால் அங்கு நோய் பரவும் வேகத்தை உங்களால் கணிக்க முடியும் என்கிறார்கள் மருத்துவத் துறை நிபுணர்கள்.

மக்கள் கேட்கவில்லை
வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு மக்களை அரசு கேட்டுக் கொண்டும் அதை மதிக்காதது உள்ளிட்டவை, திடீரென நோய் பரவல் அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது. கலிஃபோர்னியா பொது சுகாதாரத் துறை அறிவிப்புப்படி, வியாழக்கிழமை 379 கொரோனா நோயாளிகள் அங்கு உயிரிழந்தனர். இதுதான் அந்த மாகாணத்தின், மிக உயர்ந்த ஒரு நாள் எண்ணிக்கையாகும்.

கலிபோர்னியா நிலமை
புதன்கிழமை 293 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். நேற்று, கலிபோர்னியாவில், 300 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதுவரை 22,000 க்கும் மேற்பட்ட கலிஃபோர்னியர்கள் கொரோனாவால் இறந்துள்ளனர். கலிபோர்னியாவின் ஒட்டுமொத்த கேஸ்கள் எண்ணிக்கை 17 லட்சத்திற்கும் அதிகமாகும், வியாழக்கிழமை 52,281 புதிய கேஸ்கள் சேர்ந்துள்ளன.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications