கொரோனா சிகிச்சைக்கு பொன்மணி மாளிகை திருமண மண்டபத்தை மருத்துவமனையாக மாற்ற தருகிறோம் - வைரமுத்து
திருமண மண்டபங்களைத் தற்காலிக மருத்துவ மனைகளாக மாற்றுவதற்குத் தமிழக அரசு முடிவெடுத்தால் எங்கள் 'பொன்மணி மாளிகை' திருமண மண்டபத்தை மருத்துவமனையாக மாற்ற வழங்குகிறோம் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளது.
சென்னை: திருமண மண்டபங்களைத் தற்காலிக மருத்துவ மனைகளாக மாற்றுவதற்குத் தமிழக அரசு முடிவெடுத்தால், முதல் மண்டபமாக எங்கள் 'பொன்மணி மாளிகை' திருமண மண்டபத்தை மருத்துவமனையாக மாற்ற வழங்குகிறோம் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் தினசரி பாதிப்பு 25000 பேரை தாண்டியுள்ளளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவார்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சம் பேரை எட்டியுள்ளது.
அரசு, தனியார் மருத்துவமனைகளில் மளமளவென நிரம்பி வருகின்றன. ஹோட்டல்கள், பள்ளி, கல்லூரிகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் லாக்டவுன் காலத்தில் திருமண மண்டபங்கள் காலியாகவே உள்ளன. அந்த மண்டபங்களை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற முடிவெடுத்தால் எங்களின் மண்டபத்தை தருகிறோம் என்று வைரமுத்து கூறியுள்ளார்.

திருமண மண்டபங்களைத் தற்காலிக மருத்துவ மனைகளாக மாற்றுவதற்குத் தமிழக அரசு முடிவெடுத்தால், முதல் மண்டபமாக எங்கள் 'பொன்மணி மாளிகை' திருமண மண்டபத்தை மருத்துவமனையாக மாற்ற வழங்குகிறோம் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். மணம் நிகழ்வதைவிட குணம் நிகழ்வதே மங்கலமல்லவா? என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.











Click it and Unblock the Notifications