"உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்ளுங்கள்.. ஏன் முக்கியம் தெரியுமா!" புத்தாண்டு வாழ்த்தில் சத்குரு
சென்னை: தமிழ்ப் புத்தாண்டு இன்று கொண்டாடப்படும் நிலையில், ஈஷா நிறுவனர் சத்குரு இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், நாம் உணவில் சிறு தானியங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆண்டுதோறும் சித்திரை முதல் தேதி தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த புது வருடப் பிறப்பானது சித்திரை விஷு என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் அசாம், பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

ஏப்ரல் 13ஆம் தேதியுடன் சுபகிருது ஆண்டு நிறைவடையும் நிலையில், சோபகிருது ஆண்டு தொடங்குகிறது. இன்று தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்ட நிலையில், பல கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பொதுமக்கள் இன்று காலையே கோயிலுக்குச் சென்று வழிபட்டனர்.
மேலும், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஈஷா நிறுவனர் சத்குரு தனது வாழ்த்தை வெளியிட்டுள்ளார்.
உலகெங்கும் வாழும் தமிழர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவித்துள்ள அவர், பாரம்பரியமான சிறுதானியங்களை நம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதையும் தனது புத்தாண்டு வாழ்த்தில் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்ப் புத்தாண்டிற்காக ஈஷா நிறுவனர் சத்குரு பாரம்பரியமான சிறுதானியங்களைச் சேர்த்துக்கொள்ள வலியுறுத்தி வெளியிட்ட தனது புத்தாண்டு வாழ்த்தில், "'உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள். நம் தமிழ்க்கலாச்சாரத்தில், மண்ணை 'தாய் மண்' எனச் சொல்லுகிறோம். ஏனெனில், அந்தக்காலத்திலிருந்தே மண் நம் உயிருக்கு மூலமானது, நம் தாய் போல என்று உணர்ந்து, நாம் பல்லாயிரம் வருடங்களாக விவசாயம் செய்து வருகிறோம்.
தமிழ் மக்களுக்கு விவசாயத்தில் மிகவும் ஆழமான அனுபவம் உள்ளது. அப்படி இருப்பினும், கடந்த இருபது, முப்பது வருடங்களில் நம் மண்ணைக் காப்பாற்றாமல் விட்டுவிட்டோம். நம் மண்ணைக்காக்க, நாம் அனைவரும் கம்பு, வரகு, சாமை, ராகி உள்ளிட்ட சிறுதானியங்களை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், சிறுதானியங்கள் வளரும் இடத்தின் மண் வளமாகவே இருக்கும்.

மேலும், தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமல்ல. இது ஒரு பெருமை, இது ஒரு திறமை. திறமை என்றால் ஏதோ ஒரு செயல் மட்டும் இல்லை. நாம் வாழும் முறையிலேயே நம் திறமை காட்டப்படவேண்டும். நம் தமிழ் கலாச்சாரத்தில், இலக்கியத்தில், எல்லா இடங்களிலும், சித்தர், யோகிகள் என இருந்தனர். உள்நிலையில் எப்படி இருக்கிறோம் என்பது முக்கியம் என்பதால், ஒரு ஊரை உருவாக்கும் முன்னரே அங்கு கோயிலை உருவாக்கினோம்.
பொருளாதாரம், குடும்ப வாழ்க்கை என எல்லாவற்றையும்விட முக்கியமானது நமது ஆன்மீகம். நாமே ஒரு கோயிலாக வாழவேண்டும் என்பதாலேயே, தமிழ்நாட்டின் குறியீடாக ஒரு கோயிலை வைத்துள்ளோம். இதுதான் தமிழ் கலாச்சாரம். இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் அனைவருக்கும் எனது ஆசியும், வாழ்த்துக்களும்' என்று அவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications