Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்ஸ்டண்ட் பெர்சனல் லோன் வேண்டுமா? அதுவும் சிபில் ஸ்கோர் இல்லாமல்.. இதோ ஈசி வழிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒவ்வொரு நாளும் நமக்கு பொருளாதார தேவைகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. ஆனால் இதை சமாளிக்கும் அளவுக்கு நிதி ஆதாரம் நம்மிடையே இருப்பதில்லை. அவசரத்திற்கு கடன் வாங்க வேண்டும் என்றாலும் சிபில் ஸ்கோர் எனும் தொல்லை குறுக்கே வந்துவிடுகிறது. ஆனால் தற்போது கடன் வழங்கும் வழிமுறைகளில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சிபில் ஸ்கோர் இல்லாமலும் இனி ஈசியாக கடன் வாங்க முடியும்.

இன்ஸ்டண்ட் பெர்சனல் லோன்-ஐ CIBIL ஸ்கோர் இல்லாமல் எவ்வாறு பெறுவது?

Know about getting instant personal loan without CIBIL score

உடனடியாக தனிநபர் கடன்களை பெறுவதற்கு ஏராளமான வழிமுறைகள் இருக்கின்றன. அதுவும் சிபில் ஸ்கோர் இல்லாமல் கடன் கிடைக்கும். ஆனால் அதற்கு முன்னர் அதை எப்படி பெறுவது என்பது குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும். இன்ஸ்டண்ட் லோன் என்பது குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பி செலுத்தக்கூடிய ஒரு வகை கடன் முறையாகும். யாருக்குதான் உடனடி கடன் தேவை இருக்காது? எனவேதான் இந்த இன்ஸ்டன்ட் லோன் திட்டம் மிகவும் புகழ்பெற்ற திட்டமாக இருக்கிறது. இருப்பினும் மேலே குறிப்பிட்டத்தை போல CIBIL ஸ்கோர் இந்த கடன் வசதிக்கு பெரும் தடையாக இருக்கிறது. ஆனால் தற்போது இதில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதாவது தனிநபர் கடனுக்கு இனி சிபில் ஸ்கோர் அவசியமில்லை.

பொதுவாக கிரடிட் ஸ்கோர் என்று அறியப்படும் CIBIL ஸ்கோர் ஒரு தனிநபரின் கடன் தகுதிவரையறையை அளவிடும் ஒரு எண்ணாகும். உயர்ந்த CIBIL ஸ்கோர் கொண்டவர்களுக்கு தாராளமாக கடன் வழங்கப்படுகிறது. அதேபோல ஒரு சாதகமான காலவரையறைகளுடன் கூடிய கடன் உதவியைப் பெறுவதற்கான சாத்தியக் கூறுகளையும் இது அதிகரிக்கிறது. ஆனால் சிபில் ஸ்கோர் இல்லாமல் கடன் பெறுவது எப்படி? இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

1.முன் அங்கீகரிக்கப்பட்ட தொகையுடனான கடன் வழங்கல்களை கண்டறியுங்கள்

நாம் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் ஒரு வங்கி கணக்கு இருக்கும். இந்த வங்கி கணக்கில் உங்களுக்கான ஒரு முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகை வழங்கல் (pre-approved loan offer) நிச்சயம் தயாராக இருக்கும். இந்த வங்கிகள் உங்கள் கடந்த கால கடன் பரிமாற்றங்கள் பற்றிய பக்கா டேட்டாக்களை வைத்திருக்கும். எனவேதான் முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகையை கொடுக்க முன் வருகின்றன. பெரும்பாலும் இந்த கடனுக்கு சிபில் ஸ்கோர் அவசியமில்லை. எனவே கடன் வேண்டும் என்று நினைப்பவர்கள் சேமிப்பு/சம்பள கணக்கு உள்ள வங்கி அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் இது குறித்து விசாரிக்க வேண்டும்.

2.பல்வேறு நிதி வழங்குனர்களை ஆராய்ந்து கண்டறியுங்கள்

வங்கிகள் சிபில் ஸ்கோரை செக் செய்வதால் கடன் உடனடியாக கிடைக்க வாய்ப்புகள் குறைவு. ஆனால் வங்கிகள் தவிர வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும் தனிநபர் கடன்களை வழங்கி வருகின்றன. எனவே அவற்றில் சரியான நிறுவனத்தை கண்டறிவது அவசியம். இந்த நிறுவனங்கள் சிபில் ஸ்கோரை பிரச்னையாக கருதாமல் உங்களது வருமானம், எங்கெல்லாம் வேலை செய்தோம் என்கிற வரலாறு, வங்கி பரிவர்த்தனைகள் போன்றவற்றை பரிசீலித்து கடன் வழங்குவது குறித்து முடிவெடுக்கும்.

3.ஒரு கூட்டு விண்ணப்பதாரருடன் இணைந்து விண்ணப்பியுங்கள்

சிபில் ஸ்கோர் இல்லாமல் ஒரு கடனைப் பெறுவதற்கான உங்கள் வாய்ப்பை அதிகரிக்கக் கூடிய மற்றொரு வழி, நல்ல கிரடிட் ஸ்கோர் கொண்ட யாராவது ஒருவருடன் கூட்டு விண்ணப்பதாரராக இணைந்து விண்ணப்பிப்பதாகும். அம்மாதிரியான கூட்டு விண்ணப்பதாரர்களால் கடன் தொகை திருப்பிச்செலுத்தப்படுவது, உத்திரவாதமளிக்கப்படுவதால், திருப்பிச் செலுத்துவதில் தவறுகள் நிகழ்வதற்கான வாய்ப்பு குறைவதாக கடன் கொடுப்பவர்கள் கருதுவார்கள். எனவே உங்களுக்கு தனிநபர் கடன் உடனடியாக கிடைத்துவிட வாய்ப்பிருக்கிறது.

4.நிலையான வருமானத்திற்கான ஆதாரத்தை வழங்குங்கள்

அதேபோல ஒரு கடனை சிபில் ஸ்கோர் இல்லாமல் கடன் பெற விண்ணப்பிக்கும் போது, ஒரு நிலையான வருமானம் இருப்பதற்கான ஆதாரங்களை சமர்பிக்கக வேண்டியதாக இருக்கும். கடனை திருப்பிச்செலுத்தும் தகுதி இருக்கிறதா? இல்லையா? என்பதை தெரிந்துக்கொள்ள கடன் வழங்குனர்கள் இதை கேட்பார்கள். எனவே தனிநபர் கடனை பெறுவதற்கு வருமான கணக்கு, வருமான வரி கணக்கு, வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.

5.நிதி செயல்பாடுகள் தொடர்பானவற்றில் பொறுப்பான நடத்தையை காட்டுங்கள்

அதேபோல கடனை பெறுவதற்கு பண பரிவர்த்தனை, ஏற்கெனவே வாங்கிய கடனை சரியாக கட்டி அடைக்கப்பட்டது என நிதி செயல்பாட்டில் பொறுப்புடன் இருந்திருக்க வேண்டியது அவசியம். இது கடன் வழங்கும் சாத்தியக்கூறுகளை மேலும் அதிகமாக்கும். இது தவிர இது நீங்கள் பெறும் கடனை பொறுப்பான வழிகளில் முதலீடு செய்யும் திறனை வளர்க்க உதவும்.

பஜாஜ் பைனான்ஸ் லிமிட்டட் போன்ற நிதி வழங்குனர்கள், சிபில் ஸ்கோரை கணக்கில் கொள்ளாமல் ரூ.12,76,500 வரை உடனடி தனிநபர் கடனை வழங்குகிறார்கள். மற்ற நிதி நிறுவனங்களை போலவே நாங்களும் கடன் பெறுவோரின் வங்கி பரிவர்த்தனை, சம்பளம், ஏற்கெனவே வாங்கி கடனை அவர் எப்படி செலுத்தினார் போன்ற விவரங்களை சேகரித்து கடனை வழங்குகிறோம். இது தவிர ஏற்கெனவே பஜாஜ் பைனான்ஸில் கணக்கு வைத்திருப்பவர்கள், தங்களுக்கான ஆஃபர்களை சரிபார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் சில நேரங்களில் உங்களுக்கு ஏறகெனவே தனிநபர் கடன் ஆஃபர் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

இதுவே புதிய வாடிக்கையாளர்களாக இருந்தால், பஜாஜ் ஃபின்சர்வ் வலைத்தளத்திலுள்ள இன்ஸ்டா பெர்சனல் லோன் பக்கத்துக்கு வருகை தந்து , "செக் ஆஃபர்" என்பதில் கிளிக் செய்வதன் மூலம் எளிதாக இன்ஸ்டா பெர்சனல் லோன் வசதிக்கு விண்ணப்பிக்கலாம். மற்றும் தங்களின் மொபைல் எண் மற்றும் OTP யை உள்ளிட்டு தங்கள் கடன் தகுதித் தொகையை அறிந்து கொள்ளலாம். எங்கள் இன்ஸ்டா பெர்சனல் லோன்ஸ் குறித்து மேலும் அதிகம் தெரிந்து கொள்ளவும் மற்றும் உங்களுக்கான முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகையை சரிபார்க்கவும் பஜாஜ் ஃபின்சர்வ் வலைத் தளத்துக்கு இன்றே உடனடியாக வருகை தாருங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+