என்ன சொல்ல போகிறார்? எடப்பாடியின் “லாஸ்ட் பன்ச்” என்ன? காத்திருக்கும் தென்சென்னை மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கி இன்றுடன்‌ நிறைவு பெற உள்ளன.அனைத்து கட்சிகளின் பிரச்சாரங்களால் தமிழ்நாடு தேர்தல் களம் பரபரப்பாகவே இருந்தது.குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்தும் பிரச்சார பொதுக்கூட்டங்கள் மக்கள் இடையே பெரிய வரவேற்பும் தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகின்றது.

அந்த வகையில் இன்று தென் சென்னையில் உள்ள சின்னமலையில் தன் கடைசி நாள் பிரச்சாரத்தை நிறைவு செய்ய உள்ளார் எடப்பாடி பழனிசாமி. இத்தனை நாட்களும் அவர் பேசிய பேச்சுகளும், கருத்துகளும் அந்தந்த தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும், பலரின் கவனத்தை ஈர்த்து வந்தது.

What will be the last punch of Edappadi Palanisamy in his Lok Sabha Election Campaign 2024

குறிப்பாக அந்தந்த தொகுதியில் இருக்கும் பிரச்சினைகளை முன்வைத்தும், திட்டங்களை பற்றியும் பேசிவருகிறார் எடப்பாடி பழனிசாமி. அந்தவகையில் தென் சென்னை தொகுதியில் என்னென்ன பிரச்சினைகளை பற்றி பேச போகிறார் என மக்கள் ஆவலுடன் உள்ளனர்.

மிக்ஜாம் பேரிடர் காலத்தில் கண்டுக் கொள்ளாத திமுக அரசின் மீதும், நிவாரண நிதி தராத மத்திய அரசின் மீதும் மக்கள் கடும் கோபத்தில் உள்ளது தெளிவாக தெரிகிறது‌.

அந்த வகையில் இன்று தன் கடைசி நாள் பிரச்சாரத்தில் என்னென்ன பிரச்சினைகள், திட்டங்கள் பற்றி பேச போகிறார் என்ற ஆர்வம் மக்களிடையே நிலவுகிறது. ஒவ்வொரு பிரச்சாரத்திலும் தன் கருத்துக்களை நெற்றியடியாக வைக்கும் எடப்பாடி பழனிசாமி இன்று தென் சென்னையில் எந்தவித பன்ச் உடன் நிறைவு செய்ய போகிறார் என்று மக்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+