Aviyal Recipe in Tamil: அடைக்கு ஏற்ற அவியல்! செய்வது எப்படினு பார்க்கலாமா? அப்படியே சாப்பிடலாமே!
Aviyal recipe: எல்லா காய்கறிகளையும் போட்டு அவியலை எப்படி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம். இதற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இதை அப்படியே சாப்பிட்டாலும் ருசியாக இருக்கும்.
தமிழகம், கேரளாவில் அவியல் அடிக்கடி செய்யப்படும். அடைக்கு தொட்டுக் கொள்ளவும், வீட்டு விசேஷங்களிலும், பொங்கல் காலத்திலும் இந்த அவியல் செய்வதுண்டு.

சிலர் காய்கறிகள் எல்லாம் தீர்ந்து போனதும் புதிதாக காய்கறிகளை வாங்கும் முன்பு பிரிட்ஜில் என்ன இருக்கிறது என பார்ப்பார்கள். அப்போது எந்தெந்த காய்கறிகள் எல்லாம் ஒன்று, இரண்டு என மீந்துள்ளதோ அதை எடுத்து போட்டு அவியல் வைத்து அசத்துவார்கள்.
அவியல் வைத்தால் வீடே கமகமக்கும். சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். ரசம் சாதம் வைத்தால் தொட்டுக் கொள்ளலாம். காரக்குழம்பு உள்ளிட்டவைகளுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
இதற்குத்தான் தொட்டுக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் இல்லை. நம் இஷ்டம்தான். சரி இந்த அவியலை எப்படி செய்வது என பார்க்கலாமா?
தேவையான பொருட்கள்
கத்திரிக்காய்- 2
உருளைக் கிழங்கு- 2
முருங்கைக் காய்- 1
வள்ளிக்கிழங்கு- 1
வாழைக்காய்- 1
பீன்ஸ், கேரட்- தலா ஒரு கப்
அவரைக்காய்- அரை கப்
பூசணிக்காய்- 50 கிராம்
சௌசௌ- 25 கிராம்
பச்சை மொச்சை- 250 கிராம்
தேங்காய்
சீரகம்- 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய்- 3
தேங்காய் எண்ணெய் - சிறிதளவு
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள்- சிறிதளவு
தயிர்- 100 மில்லி (கொஞ்சம் தண்ணீர் ஊற்றி பல்ஸ் மோடில் தயிரின் கட்டிகளை நீக்கி நைஸாக்கவும்)
இந்த அளவுகளில் உங்களுக்கு பிடித்தமான காய்கறிகள் எதுவோ அதை கூட்டிக் கொள்ளலாம்.
செய்முறை
மேலே சொன்ன காய்கறிகளை குக்கரில் வேக வைப்பதால், அவற்றை கழுவி, பெரிய பெரிய சைஸில் நறுக்கிக் கொள்ளவும்.
பின்னர் அவற்றை குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் போட்டு குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
பச்சை மொச்சையில் தனியே சுடுநீரில் வேக வைக்கவும்.
காய்கறிகள் வெந்ததும், அதில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை அரைத்து சேர்க்கவும். பின்னர் காய்கறி, அரைத்த விழுதை நன்கு கலக்கி சற்று கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் அவை ஆறியதும், அதில் அடித்து வைத்த தயிரை சேர்த்துவிடவும்.
தேங்காய் எண்ணெய்யை காய வைத்து அதில் கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து பொரிந்ததும் அவியல் கலவையில் கொட்டி கலந்து விடவும். இந்த அவியல் கூட்டு போல் சற்று கெட்டியாக இருக்க வேண்டும். இதில் தேவைப்பட்டால் கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கலாம்.
சிலர் மோர் சேர்க்காமல் அவியல் செய்வார்கள். இன்னும் சிலர் தேங்காய் அரைக்கும் போது அதில் சிறிது இஞ்சியையும் சேர்ப்பார்கள்.












Click it and Unblock the Notifications