உடைத்த தேங்காய் நிறம் மாறாமல் இருக்க ஒரு சூப்பர் டிப்ஸ்! அப்படியே ஃபிரஷ்ஷாக இருக்கும்!
How to keep the broken coconut as fresh: தேங்காயை உடைத்தால் அதில் ஒரு மூடியை பயன்படுத்திவிட்டு மறு மூடியை பிரிட்ஜில் வைத்தாலும் அது நிறம் மாறியிருக்கும். அதை மீண்டும் பயன்படுத்துவதற்கும் சற்று அச்சமாக இருக்கும். இதற்கு ஒரு சூப்பர் டிப்ஸ் பார்க்கலாம்.

வீடுகளில் சாமி கும்பிடுவதற்கு தேங்காய் உடைத்தால் அந்த தேங்காயில் ஒரு மூடியில் சட்னி அரைத்துவிட்டு மறு மூடியை கவரில் வைத்து பிரிட்ஜில் வைத்து விடுவோம்.
பிறகு 3 நாட்கள் கழித்து அந்த தேங்காயை எடுத்து பார்த்தால், அதன் ஓரங்களில் மஞ்சள் நிறத்தில் இருக்கும். உள்ளேவும் ஏதோ அழுக்கானது போல் இருக்கும். இதை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்போம்.
உடனே அதை தூக்கிவீசிவிட்டு வேறு தேங்காயை உடைத்து அதை பயன்படுத்துவோம். மீதியுள்ள அரை மூடியை எடுத்து மீண்டும் அதே போல் வைப்போம். அதுவும் பழைய மாதிரியே ஆகிவிடும். ஆக ஒவ்வொரு முறையும் அரை மூடி தேங்காயை தூக்கி எறியும் நிலை ஏற்படும்.
இதற்கு ஒரு சூப்பர் டிப்ஸ் பார்க்கலாம். அதாவது இது நான் பயன்படுத்தி பலனடைந்ததால் சொல்கிறேன். அரை மூடி தேங்காயை பயன்படுத்திவிட்டு மீதமுள்ள அரைமூடி தேங்காயின் வெள்ளை நிற பகுதிகளில் ஓரங்களிலும் மைய பகுதிகளிலும் தேங்காய் எண்ணெய்யை தேய்த்து ஒரு கவரில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் போதும். அதிகபட்சம் 5 நாட்களாவது அப்படியே பிரஷ்ஷாக இருக்கும். இதை பயன்படுத்திவிட்டு எப்படி இருந்தது என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள்.












Click it and Unblock the Notifications