இயேசுவின் தரிசனம்...
இயேசு பிறந்து விட்டார் என்ற செய்தி கேட்டவுடன் அவரைப் பார்ப்பதற்காக கிழக்கு பகுதியிலிருந்து இயேசு கிறிஸ்துவை பார்ப்பதற்காக சாஸ்திரிகள்ஜெருசலேம் நகருக்கு வந்தனர்.
கிழக்குப் பகுதியில் உதித்த நட்சத்திரத்தைப் பார்த்து அவர்கள் இயேசு பிறப்பை உணர்ந்தனர். இந்த செய்தியைக் கேள்விப்பட்டவுடன், ஏரோது மன்னன்அதிசயித்தான். ஜெசருசேலம் நகர மக்களும் அதிசயித்தார்கள்.
இயேசு எங்கு பிறந்திருப்பார் என அறிய வேத ஆச்சாரியர்களைக் கூப்பிட்டு ஏரோது மன்னன் விசாரித்தான். அதற்கு அவர்கள்,பெத்தலஹேமில் பிறப்பார்என தீர்க்கதரிசிகள் கூறியதாக சொல்லவும், சாஸ்திரிகளை அழைத்து இயேசு கிறிஸ்து பிறந்திருப்பதை பார்த்து விட்டு வருமாறும், வந்து என்னிடம்சொல்லுமாறும் கூறி அனுப்பி வைத்தான்.
இதைத் தொடர்ந்து விண்ணில் தோன்றிய நட்சத்திரம் வழி காட்ட அதை தொடர்ந்து அனைவரும் சென்றனர்.
நட்சத்திரம் அவர்களை இயேசு பிறந்த வீட்டின் முன் இட்டுச் சென்றது. அங்கு மரியாளின் மடியில் கருணையே உருவாக தவழ்ந்து கொண்டிருந்தார் இயேசு பிரான்.குழந்தை இயேசுவையும், மரியாளையும் வணங்கி தாங்கள் கொண்டு சென்றிருந்த பொன்னையும், பொக்கிஷங்களையும் கொடுத்து மகிழ்ந்தனர்.












Click it and Unblock the Notifications