மஹாளய அமாவசை
அஅமாவாசை தினம் என்பது இறந்து போன மூதாதையர்களை (பித்துர்ககைள) நினைத்து அவர்களுக்கு பூஜை செய்யும் நாளாகும்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று சுத்தமாக நீராடி பித்ருக்களுக்கு பூஜை செய்வது வழக்கம்.
அமாவாசையில் மஹாளய அமாவாசை மிகவும் குறிப்பிடத்தக்கது.
மஹாளய பட்சம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் பவுர்ணமிக்கு அடுத்த நாளான பிரதமை முதல் அமாவாசை வரை 15 தினங்களுக்கு இறந்தபித்ருக்கள் பூமிக்கு வருகிறார்கள் என்று நம்பப்படுகிறது.
இறந்து போனவரின் திதி தெரிந்தால் அந்த திதி தினத்தன்றும், தெரியாவிட்டால் மஹாளய அமாவாசை தினத்தன்றும் பித்ருக்கள் நற்கதி அடைய பூஜை செய்யவேண்டும் என்று பெரியோர்களால் கூறப்பட்டுள்ளது.
மஹாளய அமாவாசையின் போது பிரமாணர்கள் சிறப்பான முறையில் தர்ப்பணம்செய்வார்கள்.
மஹாளய அமாவாசை தினத்தன்று பித்ருக்கள்,குறிப்பாக ஆயுதம் மூலமாககொல்லப்பட்டோ, தற்கொலை செய்து கொண்டோ, அல்லது விபத்து மூலமாக அகாலமரணடைந்து போன பித்ருக்களுக்கு முக்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக பூஜைசெய்யும் நாளாகும்.
மஹாளய அமாவாசை தினத்தன்று பிராமணர்களுக்கு அன்னதானம் செய்வது சிறந்ததுஎன்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டு (விஷு ஆண்டு) மஹாளய அமாவாசை 17.09.2001 திங்கள்கிழமைவருகிறது. திங்கள்கிழமையில் மஹாளய அமாவாசை வருவது சிறப்பானதாகும்.
திங்கள்கிழமையும், அமாவாசையும் கூடி வரும் போது அரச மரத்ததில் முப்பத்துமுக்கோடி தேவர்களும் கூடியிருப்பார்கள், அப்போது அரச மரத்தை சுற்றி வந்தால்நினைத்த காரியம் நிறைவேறும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கும்,பாவங்கள் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
அமாவாசை சோமவார விரதமும் மஹாளய அமாவாசை தினத்திலேயேஅனுஷ்டிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications