மதுரையில் சித்திரைத் தேரோட்டம்
மதுரை:
மதுரையில் அருள்மிகு மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக் கல்யாணம் நேற்று நடைபெற்ற நிலையில் இன்று சிறப்புத்தேரோட்டமும் சிறப்பாக நடந்தேறியது.
நேற்று திருக்கல்யாணம் செய்து கொண்ட அன்னை மீனாட்சியும் பெருமான் சுந்தரேஸ்வரரும் இன்று காலைதனித்தனியாக அலங்கரிக்கப்பட்ட தேர்களில் பவனி வந்தனர்.
அருள்மிகு மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றியுள்ள மேல மாசி , கீழ மாசி, வடக்கு மாசி, தெற்கு மாசி ஆகியநான்கு மாசி வீதிகளில் இரு தேர்களையும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் இழுத்து வந்தனர்.
நகரில் வலம் வந்த மீனாட்சி-சுந்தரேஸ்வரரை தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குழுமியிருந்தனர்.
நான்கு முக்கிய வீதிகளையும் வலம் வந்த பின்னர் இரு தேர்களும் இன்று காலை 11 மணிக்கு மீனாட்சி அம்மன்கோயிலில் உள்ள நிலையை அடைந்தன.
இந்நிலையில் வரும் சனிக்கிழமை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் புகழ்பெற்ற நிகழச்சி நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications