ஊர்வலத்துக்கு மீண்டும் அனுமதி
சென்னை:
சென்னையில் விநாயகர் ஊர்வலங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதாவியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
சென்னையில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படலாம் என்று கருதிய சென்னை காவல்துறை ஆணையர்முத்துக்கருப்பன், நகரில் விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடத்தத் தடை விதித்தார். இதேபோல, புறநகர்ப்பகுதிகளிலும் ஊர்வலத்திற்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதாகூறியுள்ளார்.
சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. சட்டம் ஒழுங்கு நிலையைக்கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் தடையை மீறி ஊர்வலம் நடத்துவோம்என சில அமைப்புகள் கூறியிருந்தன.
இந்த நிலையில் அந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் காவல்துறை ஆணையரைச் சந்தித்து பேசினர். சட்டம் ஒழுங்குநிலைமை கெடாதவாறு பார்த்துக் கொள்வதாக அவர்கள் அப்போது தெரிவித்தனர். இதுதொடர்பாக உத்தரவாதம்தெரிவித்து கடிதத்தையும் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து காவல்துறை ஆணையருடன் ஆலோசனை நடத்திய பிறகு ஊர்வலங்களுக்கு அனுமதி கொடுக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடக்கும், அதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதுஎன்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications