Camphor: கப்புனு பத்திக்கும் கற்பூரம்! தீபாராதனையின் போது அணைந்தால் அபசகுணமா? சாஸ்திரம் சொல்வது என்ன
சென்னை: வீட்டிலோ அல்லது கோயிலிலோ கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டும் போது திடீரென கற்பூரம் அணைந்துவிட்டால் அது அபசகுணமா என்ற கேள்வி பலர் மத்தியில் எழுந்துள்ளது. அவ்வாறு நடந்துவிட்டால் அவர்களது மனம்படும் பாட்டை சொல்லி மாளாது. அது போல் தேங்காய் அழுகியிருந்தால் அதுவும் அபசகுணம் என பலர் நினைக்கிறார்கள்.
கற்பூரம் ஏற்றுவது என்பது இந்து சமய வழிபாடுகளில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள ஒரு நிகழ்வாகும். இதன் பின்னணியில் பல ஆன்மீகத் தத்துவங்களும், நடைமுறைப் பலன்களும் உள்ளன. அவற்றைப் பற்றி விரிவாகக் காண்போம்.

கற்பூரம் எரியும்போது, அது தன்னை முழுவதுமாக அழித்துக் கொண்டு, சாம்பல் எதுவும் மிஞ்சாமல் காற்றில் கரைந்து மறைகிறது. இதைப் போலவே, மனிதன் தன்னுடைய அகங்காரம் மற்றும் மாயையை அழித்து, இறைவனின் அருட்ஜோதியில் இரண்டறக் கலந்து முக்தி அடைய வேண்டும் என்பதைக் கற்பூரம் உணர்த்துகிறது.
கற்பூரத்தின் தீபம், நமக்குள்ளிருக்கும் ஞான ஒளியைக் குறிக்கிறது. இறைவனின் திருமேனியைக் காண, புற இருளை நீக்குவதுடன், நம் அகத்தில் இருக்கும் அறியாமை என்னும் இருளும் நீங்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.
கற்பூரம் வெண்மையானது. இது சுத்த குணமுள்ள ஆன்மாவைக் குறிக்கிறது. தூய எண்ணத்துடனும், தூய உள்ளத்துடனும் இறைவனை சரணடைய வேண்டும் என்பதைக் காட்டுகிறது.
கற்பூர ஆரத்தி கடைசியாகச் செய்யப்படுகிறது. இதுவே பூஜையை முழுமையாக்கி, இறைவனைப் பூரணமாகத் தரிசனம் செய்ய உதவுகிறது. கற்பூரம் எரியும்போது வெளிவரும் நறுமணம், ஒரு கிருமி நாசினி போல செயல்படுகிறது. இது காற்றில் உள்ள நுண்ணுயிரிகள் (Bacteria) மற்றும் எதிர்மறை ஆற்றல்களை நீக்கி, சூழலைத் தூய்மையாக்குகிறது.
கற்பூரத்தின் வாசனை மன அழுத்தத்தையும் (Stress) பதற்றத்தையும் (Anxiety) குறைத்து, மனதைத் தெளிவாக்கவும், அமைதியான சூழலை உருவாக்கவும் உதவுகிறது. இதன் காரமான வாசனை கொசுக்கள் போன்ற பூச்சிகளை வீட்டிற்குள் அண்ட விடாமல் விரட்ட உதவுகிறது.
சாதாரண கற்பூரத்தை விட, பச்சை கற்பூரத்தை தெய்வ சன்னதிகளில் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது என்று கருதப்படுகிறது. இது அதிக நறுமணமும், நேர்மறை சக்தியையும் கொண்டது.
கற்பூரத்தை எப்போதும் பித்தளை அல்லது வெள்ளி போன்ற உலோகத் தட்டில் (ஆரத்தித் தட்டு) வைத்து ஏற்றி, இறைவனுக்கு ஆரத்தி காட்ட வேண்டும். எவர் சில்வர் தட்டில் ஏற்றக் கூடாது. மண் அகல், மண் தட்டில் வைத்து கூட ஏற்றலாம்.
பொதுவாக காலை மற்றும் மாலை வேளைகளில் பூஜை செய்யும்போது கற்பூரம் ஏற்றலாம். குறிப்பாக சூரிய அஸ்தமனம் ஆகும் நேரத்தில் கற்பூரம் ஏற்றுவது வீட்டில் அமைதியையும், செழிப்பையும் தரும் என்று நம்பப்படுகிறது.
சிலர் எதிர்மறை ஆற்றல், திருஷ்டி (Evil Eye) நீங்குவதற்காக, கற்பூரத்துடன் கிராம்பு (கிராம்பு) சேர்த்து எரிக்கின்றனர். வீட்டின் ஏதேனும் ஒரு மூலையில் வாஸ்து குறைபாடு இருந்தால், அங்கே ஒரு கிண்ணத்தில் கற்பூரத் துண்டுகளை வைப்பது, எதிர்மறை ஆற்றலை நீக்கி சமநிலைப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
இப்படிப்பட்ட கற்பூரத்தை ஆரத்தி எடுக்கும் போது காற்றினால் அணைந்துவிட்டால் அதை அபசகுணமாக சிலர் நினைப்பார்கள். அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை. ஒரு வேளை அணைந்துவிட்டால், அதே கற்பூரத்தை மீண்டும் ஏற்றாமல் உடனே வேறு கற்பூர துண்டுகளை வைத்து எரித்து தீபாராதனை காட்டுங்கள்.












Click it and Unblock the Notifications