மதுரை சித்திரை திருவிழா 2026! அழகர் வைகை ஆற்றில் இறங்குவது எப்போது! முழு விவரம்!
மதுரை: மதுரை மாநகரின் அடையாளமாகவும், சைவ - வைணவ ஒற்றுமையின் சங்கமமாகவும் திகழும் உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா 2026, வரும் ஏப்ரல் மாதம் கோலாகலமாகத் தொடங்க உள்ளது. இதில் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் எப்போது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஆண்டுதோறும் மதுரை மாநகரில் சித்திரை திருவிழா களைகட்டும். அதிலும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்தான் பிரதானம். இதற்காக தமிழகமெங்கும் வாழும் மக்கள் வைகை ஆற்றில் குழுமியிருப்பார்கள். ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் அழகரை தரிசிப்பார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழா அட்டவணையின்படி, ஏப்ரல் 19-ம் தேதி மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் விழா அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. அன்றிலிருந்து மதுரையே விழாக்கோலம் பூண்டு, தினசரி அம்மனும் சுவாமியும் பல்வேறு வாகனங்களில் மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் ஏப்ரல் மாத இறுதியில் சூடுபிடிக்கின்றன. ஏப்ரல் 26-ம் தேதி மீனாட்சி அம்மன் மதுரை நகரின் அரசியாகப் பொறுப்பேற்கும் பட்டாபிஷேக வைபவம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 27-ம் தேதி திக்விஜயமும், விழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 28-ம் தேதி மிகப்பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அடுத்த நாள் ஏப்ரல் 29-ம் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறும் நிலையில், அதே நாளில் அழகர் மலையிலிருந்து கள்ளழகர் மதுரை நோக்கிப் புறப்படுவார்.
மதுரை மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், மே மாதம் 1-ம் தேதி அதிகாலை நடைபெறுகிறது. அதற்கு முந்தைய நாளான ஏப்ரல் 30-ம் தேதி, மதுரை எல்லையில் கள்ளழகரை வரவேற்கும் 'எதிர்சேவை' நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெறும்.
மே 1-ம் தேதி அதிகாலை 5:45 மணி முதல் 6:15 மணிக்குள், தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்குக் காட்சியளிப்பார். இந்த ஒரு நிகழ்வைக் காண்பதற்காகவே தமிழகம் முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றங்கரையில் திரள்வார்கள்.
ஆற்றில் இறங்கிய பிறகு, மே 2-ம் தேதி இரவு முழுவதும் ராமராயர் மண்டபத்தில் தசாவதாரக் காட்சிகள் நடைபெறும். பின்னர் கருட வாகனத்தில் பிரசன்னமாகி பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் கள்ளழகர், மே 4-ம் தேதி மீண்டும் அழகர் மலைக்குத் திரும்புவார்.
ஏப்ரல் 19-ல் தொடங்கி மே 4-ம் தேதி வரை சுமார் 15 நாட்களுக்கு மேல் மதுரையே தூங்கா நகரமாக மாறி, ஆன்மீகக் கடலில் மூழ்கியிருக்கும். லட்சக்கணக்கான மக்கள் கூடும் இந்தத் திருவிழாவிற்காகத் தமிழக அரசு மற்றும் காவல்துறை இப்போதே சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் திட்டமிட்டு வருகின்றன.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications