திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 16: அய்யோ அப்படி செய்யாதே, உருபடாதுனு யாரையும் அபசகுணமா சொல்லாதீங்க!
சென்னை: மார்கழி மாதம் 16-ஆம் நாள் இன்று! ஒருவர் ஒரு செயலை செய்ய போவதாக சொன்னால் அது உங்களுக்கு பிடிக்காமல் கூட போகலாம். ஆனால் அதற்காக முன்னாடி அபசகுணமாக அதை செய்யாதே, இப்படி ஆகிடும், அப்படி நடந்திடும்னு யாரிடமும் பேசக் கூடாது என்பதைத்தான் ஆண்டாள் இந்த பாடல் மூலம் உணர்த்துகிறாள்.

திருப்பாவை பாடல் 16
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்: நந்தகோபனின் மாளிகை வாயிலில் திரண்ட ஆயர்குலச் சிறுமிகள், கொடித் தோரணங்கள் கட்டப்பட்டிருந்த அவ்வாயிலின் காவலரிடம் கதவைத் திறக்கக் கோரினர்.
மாயச் செயல்களைச் செய்யும் கரிய நிறத்து கண்ணன், நேற்று பறை தருவதாக உறுதியளித்திருந்தான். அதனைப் பெற்று, அவனைத் துயிலெழுப்பும் பாடல்களைப் பாடவே தாங்கள் நீராடி வந்திருப்பதாகவும் கூறினர். காவலர் மறுப்பு தெரிவிக்காமல் மூடிய நிலைக்கதவைத் திறக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
திருவெம்பாவை பாடல் 16
முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்
பாடல் விளக்கம்: ஒரு கவிதை வரிகளின்படி, வானில் திரண்டிருக்கும் மேகங்கள் கடல் நீரை உறிஞ்சி கருத்த நிறம் கொண்டு, சிவனின் தேவியான பார்வதி தேவியை ஒத்திருக்கின்றன. மின்னல் வெட்டுவது, அன்னை ஈஸ்வரியின் மெல்லிய இடையைப் போலவும், இடி முழக்கம் அவளது பொற்சிலம்புகளின் ஓசையைப் போலவும் வர்ணிக்கப்பட்டுள்ளது.
மேலும், வானில் தோன்றும் வானவில், தேவியின் புருவம் போல் காட்சியளிப்பதாகக் கவிதை குறிப்பிடுகிறது. சிவனிடமிருந்து பிரியாத அந்த தேவி, தன் கணவரை வணங்கும் பக்தர்களுக்கு அருள்புரிவதைப் போல, மழை விடாமல் பொழிய வேண்டும்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications