நிலம், வீடு வாங்க ஆசையா?.. செவ்வாய் அருளைப் பெற முருகனை இப்படி வழிபடுங்கள்!
முருகன் வழிபாடு: வீரம், துணிச்சல், தலைமைத் திறன் மற்றும் சொத்து யோகம் ஆகியவற்றை வழங்கும் கிரகமாக செவ்வாய் பகவான் போற்றப்படுகிறார். பூமியின் புதல்வனாக கருதப்படும் அங்காரகனின் அருள் கிடைத்தால் நிலம், வீடு போன்ற சொத்துகள் சேரும் என்பது ஜோதிட நம்பிக்கை. செவ்வாய் தோஷ நிவாரணத்திற்கும், குழந்தை வரம் மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் முருகன் வழிபாடு சிறந்த பரிகாரமாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் செவ்வாயின் அருளும், முருகன் வழிபாட்டின் மகிமையும் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

செவ்வாய் கிரகத்தின் சிறப்புகள்
நவக்கிரகங்களில் செவ்வாய் பகவான், அங்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். நெருப்பு தத்துவத்திற்கு அதிபதியான இவர், வீரமும் துணிவும் நிறைந்த வாழ்க்கையை வழங்கக்கூடியவர். அதிகாரம் செலுத்தும் திறன், தலைமைப் பொறுப்பு ஏற்கும் ஆற்றல், தன்னம்பிக்கை, நேர்மை, நாணயம் மற்றும் எந்த சூழலிலும் வளைந்து கொடுக்காத மனப்பக்குவம் போன்ற சிறப்புகளை அளிப்பவர் செவ்வாய் பகவான்.
ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் பலமாக இருந்தால், அவருக்கு உயர்ந்த பதவி, சமூகத்தில் மதிப்பு மற்றும் சிறந்த ஆளுமை கிடைக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மேலும், கம்பீரமான தோற்றம், மிடுக்கான நடை, அதிகாரம் மிக்க குரல் ஆகியவற்றிற்கும் செவ்வாய் காரணமாக விளங்குகிறார்.
சொத்து யோகத்தை வழங்கும் செவ்வாய்
செவ்வாய் பகவான் பூமியின் புதல்வன் எனப் போற்றப்படுகிறார். அதனால் நிலம், வீடு, விவசாய நிலங்கள் போன்ற அசையா சொத்துக்களுடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாயின் அருள் கிடைத்தால் தான் நிலம் வாங்குதல், வீடு கட்டுதல் மற்றும் சொத்து சேர்த்தல் போன்ற யோகங்கள் எளிதில் அமையும் என நம்பப்படுகிறது.
முருகன் வழிபாடும் செவ்வாய் பரிகாரமும்
செவ்வாய்க்குரிய தெய்வமாக முருகப் பெருமான் கருதப்படுகிறார். எனவே, முருகன் குடிகொண்டுள்ள அனைத்து தலங்களும் செவ்வாய் பரிகாரத் தலங்களாகப் போற்றப்படுகின்றன. குறிப்பாக, செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அறுபடை வீடுகளுக்குச் சென்று முருகனை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
குழந்தை வரம் வேண்டுபவர்கள், சொத்து வாங்க விரும்புபவர்கள் மற்றும் வாழ்க்கையில் முன்னேற்றம் நாடுபவர்கள் தினமும் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் மற்றும் முருகன் துதிப் பாடல்களை பக்தியுடன் பாராயணம் செய்யலாம். மேலும், செவ்வாய்க்கிழமைகளில் முருகனுக்கு நெய் தீபம் ஏற்றி விரதம் இருந்து வழிபட்டால் கடன் தொல்லைகள் குறைந்து, மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications