கிச்சனில் மருந்துகளை வைக்கலாமா? மாத்திரைகள் சாப்பிட உகந்த திசை இதுதான்.. பெஸ்ட் வாஸ்து டிப்ஸ்
சென்னை: நம்முடைய வீட்டில் மருந்து, மாத்திரைகளை எந்த திசையில் வைத்திருக்க வேண்டும்? மருந்து எந்த திசையில் அமர்ந்து சாப்பிட வேண்டும்? என்பது குறித்தெல்லாம் வாஸ்து சாஸ்திரத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அதில் ஒருசிலவற்றை பற்றி மட்டும் பார்ப்போம்.
வீடுகளை பொறுத்தவரை, ஆரோக்கியம் தொடர்புடையதாக கருதப்படுவது வடகிழக்கு மூலைதான்.. எனவே, மருந்து மாத்திரைகளை இந்த பகுதியில்தான் வைத்திருக்க வேண்டுமாம்.

சரியான திசை: இதனால், உட்கொள்ளும் மருந்துகளின் செயல்பாடு வீரியத்துடன் விளங்கும்.. அத்துடன் விரைவில் நோய்களிலிருந்தும் விடுபடலாம்.. ஒருவேளை இந்த திசையை தவிர்த்தால், வடக்கு மற்றும் வடகிழக்கிலும் மருந்துகளை வைக்கலாம்.
வடமேற்கில் மருந்துகளை வைப்பதால், பெரிதாக தீங்கு குடும்பத்தில் அண்டாது. ஆனால், குணமடைய காலதாமதமாகும்.. ஆனால், எக்காரணம் கொண்டும், தென்கிழக்கு மற்றும் தெற்கு திசைகளில் மருந்துகளை வைக்கக்கூடாது... மற்ற திசைகளில் மருந்துகளை வைத்தால், எதிர்மறையான விளைவுகள் வரக்கூடுமாம்.
தன்வந்திரி: எப்போதுமே, வீட்டின் வடக்கு அல்லது வடகிழக்கு பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், இதனாலும் குடும்பத்தில் ஆரோக்கியம் குறையலாம். எனவே, அடிக்கடி மருந்து வைக்கும் இடத்தை சுத்தம் செய்து, மஞ்சள் நிறத்தில் தன்வந்திரி சுவாமியின் போட்டாவை வைக்கலாம்.. அல்லது நீல நிறத்தில் ஒரு ஸ்வஸ்திகாவை வைக்கலாம்.
அதேபோல, மருந்துகளை கட்டிலுக்கு அருகே அல்லது தலைக்கு மேல் வைத்துக்கொண்டு தூங்கக்கூடாது... இது தோஷத்தை உண்டுபண்ணிவிடுமாம்.. மருந்துகளை எப்போது சாப்பிட்டாலும், மேற்கு பக்கம் பார்த்து சாப்பிடுவதே சிறந்தது..
தீக்காயங்கள்: அதேபோல் மருந்துகளை பூஜையறையிலும் வைக்கக்கூடாது.. சமையலறையிலும் வைக்கக்கூடாது.. சிலர் தீக்காயங்கள் உள்ளிட்டவைகளுக்காக முதலுதவி பெட்டிகளை கிச்சனில் வைத்திருப்பார்கள். இதனால், குடும்ப நபர்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பு வரலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.. எனவே சமையறையில் மருந்துகளை வைப்பதும், அவற்றை உட்கொள்வதும் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.. சமையலறை வடகிழக்கில் அமைத்தால் பெண்களின் உடல்நலன் பாதிக்கப்படலாம்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications