பழைய துணியை தானம் தரலாமா.. பயன்படுத்தாத துணிகளை இப்படி செய்யவே செய்யாதீங்க.. கஷ்டம் அதிகமாகிடுமாம்
சென்னை: வீட்டிலிருக்கும் பொருட்கள் பழையதாகிவிட்டாலோ, அல்லது பயன்படுத்தாத பொருட்களை என்ன செய்ய வேண்டும்? இதற்கும் முன்னோர்கள் பல்வேறு அறிவுறுத்தல்களை சொல்லி வைத்துள்ளனர். இந்த சாஸ்திரங்களை சரியாக கடைப்பிடித்தாலே நம்முடைய வீடுகளிலுள்ள தரித்திரங்களை எளிதாக விரட்டிவிடலாம் என்கிறார்கள்.
வீட்டில் விளக்கேற்றும்போது சில விஷயங்களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். தீபத்திரியை மாற்றும்போது பழைய திரியை, குப்பையில் போடக்கூடாது. இந்த திரிகளை சேர்த்து வைத்து, ஏதாவது ஒரு நாளில், குடும்ப உறுப்பினர்களை, கிழக்கு பார்த்து உட்கார வைத்து, திருஷ்டி கழிக்கலாம்.

பழைய திரிகள்: அதேபோல, சாமி படம் போட்ட பழைய காலண்டரை கோவிலிலோ அல்லது மரத்தடியிலோ கொண்டுபோய் வைத்துவிடுவார்கள். சிலர் கீழே போட மனமில்லாமல் வீட்டிலேயே வைத்திருப்பார்கள். அல்லது பழைய காலண்டர் மீதே புது காலண்டரையும் மாட்டி விடுவார்கள்.
ஆனால் இவைகளை செய்தால், நிறைய சிக்கல் குடும்பத்தில் முளைத்துவிடுமாம். பழைய காலண்டர், கிழிந்த காலண்டர் எதுவானாலும், குப்பையில் போடாமல் ஓடும் நீரில் விட்டு விட வேண்டும்.
முன்னேற்றம்: அதேபோல, பழைய துணிகள் வீட்டில் நிறைய சேர்ந்துவிட்டால், முதலில் அப்புறப்படுத்திவிட வேண்டும். வீட்டில் அவைகளை சேர்த்து வைத்தால், எதிர்மறை சக்திகள் பெருகிவிடும். முன்னேற்றத்திற்கும் தடையாகிவிடும்.
பழைய துணிகளே என்றாலும் அவைகள் கிழியாமல் இருந்தால், பிறருக்கு தானமாக கொடுக்கலாம். ஆனால், உடுத்தும் துணிகளை துவைக்காமல் தானம் தரக்கூடாது.. கிழிந்த துணிகளையும் தானம் கொடுக்கக் கூடாது.
பழைய துணிகள்: துவைத்த துணிகளே என்றாலும், அதை கசங்கி போய் பிறருக்கு தரக்கூடாது. அதை மடித்து ஏதாவது ஒரு பேப்பர் அல்லது அட்டையில் வைத்து தானம் தரவேண்டும். சுருக்கமாக சொல்லப்போனால் நீங்கள் தானம் கொடுக்கும்போது, அதை வாங்குபவர்கள் மனம் குளிர வேண்டும்... அதேபோல, பயன்படுத்தப்படாத பழைய துணிகளை குப்பையில் போடக்கூடாது.. இதனால் தோஷங்கள் இன்னும் அதிகமாகிவிடும்.. எனவே, பழைய துணிகளை ஒன்றுசேர்த்து, நெருப்பில் போட்டு கொளுத்திவிட வேண்டுமாம்.












Click it and Unblock the Notifications