சார்தாம் யாத்திரை: இமயமலையின் பத்ரிநாத் திருத்தலம் இன்று திறப்பு-ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
டேராடூன்: கடவுள் பூமியாக வணங்கப்படும் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற புனிதத் தலங்களில் ஒன்றான பத்ரிநாத் கோவில் இன்று திறக்கப்பட்டது. இந்துக்களின் புனித யாத்திரைகளில் ஒன்றான சார்தாம் யாத்திரை தொடங்கிய நிலையில் இன்று காலை 6 மணிக்கு பத்ரிநாத் கோவில் திறக்கப்பட்டது.
இந்துக்களின் சார் தாம் யாத்திரை என்பது உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலையில் அமைந்துள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்திரிநாத் ஆகிய திருத்தலங்களுக்கு சென்று வழிபடுவதாகும். ஒவ்வொரு ஆண்டும் சார் தாம் யாத்திரையில் லட்சக்க்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த திருத்தலங்கள் அனைத்தும் இமயமலையில் அமைந்திருப்பதால் ஆண்டுக்கு 6 மாதங்கள் மட்டுமே திறக்கப்பட்டிருக்கும். இந்த ஆண்டு சார்தா யாத்திரை கடந்த வாரம் புதன்கிழமை தொடங்கியது. அன்றைய தினம், முதல் கட்டமாக கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி திருத்தலங்கள் திறக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் நாயன்மார்கள் போற்றிப் பாடிய திருக்கேதாரம் எனப்படும் கேதார்நாத் திருக்கோவிலும் திறக்கப்பட்டது. இமயமலையில் 11,000 அடி உயரத்தில் உள்ள திருக்கேதாரம் எனப்படும் கேதார்நாத் திருத்தலமானது,ஜோதிர்லிங்க சிவாலய திருத்தலம். அன்றைய நாளில் சார்தாம் யாத்திரையில் 12,000 பேர் பங்கெஎற்றனர்.

கேதார்நாத் கோவில் திறக்கப்பட்ட போது, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தாமி, மனைவி கீதா உள்ளிட்டோர் சிவபெருமானை தரிசனம் செய்தனர். கேதார்நாத் திருக்கோவிலில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி முதல் பூஜை செய்தார். இந்த யாத்திரையில் பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்துக்கள் பங்கேற்று சிவனை தரிசனம் செய்தனர். கேதார்நாத் திருக்கோவிலில் நடப்பாண்டு முதல் ஆரத்தி வழிபாடு நடத்தப்படுகிறது. ரிஷிகேஷ், ஹரித்வார் மற்றும் காசியில்தான் ஆரத்தி வழிபாடு இதுவரை நடைபெற்றது. தற்போது கேதார்நாத் திருக்கோவிலிலும் ஆரத்தி வழிபாடு நடத்தப்படுகிறது. மந்தாகினி, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் இந்த ஆரத்தி வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
#WATCH | Uttarakhand: The portals of Badrinath Dham opened amid melodious tunes of the Army band and chants of Jai Badri Vishal by the devotees pic.twitter.com/BHzt7gWx4V
— ANI (@ANI) May 4, 2025
இதனைத் தொடர்ந்து மற்றொரு திருத்தலமான பத்ரிநாத் கோவில் இன்று காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. பத்ரிநாத் கோவில் முழுவதும் மலாகளாலும் வ் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பத்ரிநாத் கோவிலில் தரிசனம் செய்வதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
தமிழ்நாட்டின் ஆழ்வார்களின் பாசுரங்களில், திருவதரியாச்ரமம் என போற்றப்படுகிறது பத்ரிநாத். திருமங்கையாழ்வார் பத்ரிநாத் பெருமாளைப் போற்றி மொத்தம் 22 பாசுரங்கள் பாடியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications