Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழா.. தெற்கு ரயில்வே குட் நியூஸ்.. டிக்கெட் ரிசர்வ் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: பனிமய மாதா கோவில் தங்க தேர் திருவிழா ஆகஸ்ட் ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு சென்னை எழும்பூர் டூ தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூலை 9 ஞாயிற்றுக்கிழமை முதல் ரிசர்வேசன் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இந்த தேவாலயம் போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்டது. இது சுமார் 1,500 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு 12 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆலயத்தில் சாதி, மத பாகுபாடு இன்றி அனைவரும் கொண்டாடும் திருவிழா, ஜூலை கடந்த 26ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 441வது ஆண்டு திருவிழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கடந்த ஜூலை 26ஆம் தேதி சனிக்கிழமை காலை அதிகாலை 5 மணிக்கு முதல் திருப்பலியும் 7.30 மணிக்கு கூட்டுத் திருப்பலியும் நடைபெறும்.

Chennai To Thuthukudi Special Train for Panimayamatha thanga ther festival

ஆகஸ்ட் 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட மக்கள் அனைவரும் திரளாக வந்து கலந்து கொள்வர். இதனால் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மேலும் குறிப்பிட்ட ஆண்டுகளில் மட்டும் பனிமய மாதா கோவில் திருவிழாவில் தங்கத்தேர் பவனி நடைபெறும். இந்தாண்டு கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 16வது முறையாக தங்கத்தேர் பவனி நடைபெற உள்ளது. இதனை காண பல்வேறு ஊர்களில் இருந்து தூத்துக்குடிக்கு மக்கள் வருவார்கள் என்பதால், அவர்கள் வசதிக்கேற்ப சிறப்பு ரயிலை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

தூத்துக்குடி பனிமய மாதா கோவில் தங்க தேர் திருவிழாவை தொடர்ந்து சென்னை எழும்பூரில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் சேவை குறித்து மதுரை தெற்கு ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "தூத்துக்குடி பனிமயமாதா கோவில் தங்க தேர் திருவிழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூர் - தூத்துக்குடி மற்றும் தூத்துக்குடி - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி ஆகஸ்ட் 3ம் தேதி வியாழக்கிழமை மாலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயிலானது தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூர் வழியாக வெள்ளிக்கிழமை அதிகாலை 3.10 மணியளவில் தூத்துக்குடிக்கு சென்றடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை 9ஆம் தேதி 8 மணி முதல் ரிசர்வ் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+