சபரிமலையில் பலி பூஜையின் போது அன்னத்தாலான முதலை செய்து வழிபடுவது ஏன்?
சென்னை: சபரிமலையில் பலி பூஜையின் போது அன்னத்தால் ஆன முதலை செய்து வழிபடுவது ஏன் தெரியுமா? இந்த பூஜை எதற்காக செய்யப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து தமிழ் குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: சபரிமலையில் உற்சவ பலி பூஜை என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்...

சபரிமலையில் வருடம் தோறும் நடைபெறுகின்ற உற்சவ பலி பூஜை 10 நாட்கள் நடைபெறும் இந்த பூஜை நடைபெறும் பொழுது எல்லா பூதகணங்களும் விட்டுப்போன தேவர்களுக்கும் சாமிகளுக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு அளிப்பதும் அவர்களுக்கு பூஜை செய்வதும்தான் சபரிமலை உற்சவ பலி பூஜையில் நோக்கம்.
இந்த பூஜையின் போது அன்னத்தால் முதலை செய்து அதற்கு பூஜை செய்வது ஏன்? எறும்பு, நுண்ணிய அணுக்கள், பெரிய விலங்குகள், நாம் இதுவரை அனுசரிக்கப்பட சுவாமிகள், மனித இனங்கள், உயிருள் உயிருள்ள தாவர வகைகள், மலைகள், குன்றுகள், வன தேவதைகள், புல், பூண்டு, தேவர்கள், அசுரர்கள் இவை அனைத்தையும் ஒரே நேர்கோட்டில் அமைக்கப்படும் பொழுது இத்தனை ஜீவராசிகளையும் ஒருங்கிணைத்தால் ஒரு முதலை வடிவ உருவம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இத்தனை உயிர்களுக்கும் முதலை வடிவத்தை முதன்மையாகக் கொண்டு அதை பலி பூஜை செய்து வழிபடுவது அனைத்து உயிர்களுக்கும் அன்னங்கள் போய் சேரும் என்பது ஐதீகம். ஆகையால்தான் முதலை உருவம் செய்து வழிபடுகின்றோம்...
இதற்கு மலையாளத்தில் நற்ற பலிபூஜை என்று கூறுவார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications