சிவனுக்கு ஒரு சகோதரி இருந்தாராமே! பார்வதிதான் அவரை விரட்டினாரா? கைலாயத்திலும் நாத்தனார் பிரச்சினையா?
சென்னை: சிவனுக்கு ஒரு சகோதரி இருந்தாரா, அவரை பார்வதி தேவி விரட்டி விட்டாராமே, அது ஏன் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சிவபுராணத்தில் சிவபெருமானுக்கு ஒரு சகோதரி இருந்ததாகவே கூறப்படுகிறது.
இதுகுறித்து av tamil story எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: என்னதான் சிவபெருமான், தனது மனைவி பார்வதி தேவியை நல்லபடியாக பார்த்துக் கொண்டிருந்தாலும், தேவிக்கு மனதில் ஒரு குறை இருந்துக் கொண்டே இருந்தது.

இதை உணர்ந்த சிவபெருமான், உனக்கு என்ன வேண்டும் என கேட்கிறார். அதற்கு பார்வதி தேவி, என் தனிமையை போக்கிக் கொள்ள மன உணர்வை சொல்ல, எனக்கு துணையாக இருக்க ஒரு சகோதரி வேண்டும் என்கிறார்.
அதற்கு சிவபெருமான் நான் உனக்காக சகோதரியை போன்ற ஒரு பெண்ணை உருவாக்குகிறேன், அவரை நீ பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார். பார்வதி தேவியும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொள்கிறார். ஆனால் ஒரு பெண்ணை எப்படி உருவாக்குவது என தெரியாததால் சிவபெருமான் தன்னை மனதில் நிறுத்தி தன்னை போன்றே ஒரு பெண்ணை உருவாக்கியிருக்கிறார்.
நீண்ட படர்ந்த முடி, அகன்ற தோள், என பார்க்க சிவனை போன்று ஒரு பெண்ணை உருவாக்கினார். அவருக்கு அசாவரி என பெயரிட்டார். ஈசனால் உருவாக்கப்பட்ட அசாவரியை பார்வதி தேவி நன்றாக கவனித்துக் கொண்டார்.
ஆனால் சில காலங்களில் பிரச்சினை தொடங்கியது. எவ்வளவு சாப்பிட்டாலும் அசாவரியின் பசி அடங்கியபாடில்லை. இதனால் கைலாயத்தில் இருந்த உணவுகள் அனைத்தும் தீர்ந்தன. இதை சிவனிடம் தெரிவிக்கச் சென்ற பார்வதி தேவி , ஓடி வரும் போது தடுக்கி விழுந்தார்.
அங்கு வந்த சிவபெருமான், பார்வதி தேவி எங்கே என கேட்ட போது தனது அகன்ற பாதத்தால் மறைத்துக் கொண்டு தனக்கு தெரியாது என அசாவரி தெரிவித்தார். உண்மையை அறிந்த ஈசன், அசாவரியை எச்சரித்தார்.
அசாவரியின் மோசமான நடவடிக்கையை கண்டு பார்வதி தேவி, கைலாயத்தை விட்டு
செல்லுமாறு அசாவரியை துரத்தினார். இவ்வாறு அந்த கதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அசாவரியை துரத்திய போது சிவபெருமான், பார்வதியிடம், தான் கூறிய வாக்கை ஞாபகப்படுத்தியதை அடுத்து, பார்வதி தேவியும் மன்னிப்பு கேட்டுக் கொண்டாராம்.
மேலும் நல்ல பண்புகளுடன் கூடிய அசாவரியை மீண்டும் படைக்குமாறு பார்வதி கேட்டுக் கொண்டாராம். அதற்கு சிவபெருமான், மோசமான நிலையில் இருக்கும் போது அவரை நல்வழிப்படுத்தாமல் துரத்திவிட்டு, நல்ல பண்புகளுடன் கூடிய ஒருவரை படையுங்கள் என கேட்பதில் நியாயம் இல்லை என கூறினாராம்.
முதலில் பார்வதி தேவி ஒரு சகோதரி வேண்டும் என கேட்ட போது சிவனோ, சரஸ்வதி தேவி இருக்கிறாரே, அவர் எனது தங்கையை போன்றவர் என்றாராம். ஆனால் பார்வதியோ, அவர் பிரம்மனின் மனைவி, நான் நினைக்கும் நேரத்தில் எல்லாம் பிரம்ம லோகத்தை விட்டு அவரால் வர முடியாது என்றாராம்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications