Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திரும்பின திசையெல்லாம் பணம்.. இந்த 3 பொருள் போதுமே.. தரித்திரம் நீங்கி செல்வம் சேர உதவும் "தேங்காய்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: 1 ரூபாய் நாணயம், கல் உப்பு, மஞ்சள் தூள் இந்த பொருட்கள் நம்கைவசம் இருக்கும்போது, பல்வேறு நன்மைகள் நமக்கு வந்து சேர்கின்றன.. இதுகுறித்து ஒருசில எளிய பரிகாரங்களை முன்னோர்களும் சொல்லி வைத்துள்ளனர். இதுகுறித்து பார்ப்போம்.

முழுமையான, பசுமை மாறாத வெற்றிலை ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.. இதில், வெற்றிலை மீது 1 ரூபாய் நாணயத்தையும், விரலி மஞ்சள், ஏலக்காயை வைத்து முடிச்சு கட்டிக்கொள்ள வேண்டும்.

spirituality coconut pariharam

உங்கள் பிரச்சனை மற்றும் வேண்டுதல் என்னவென்று, மனதிற்குள் பிரார்தித்து கொள்ள வேண்டும். பிறகு உங்கள் வீட்டுக்கு பக்கத்திலிருக்கும் கோயிலின் அரசமரத்தடியில், அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி, அந்த 1ரூபாய் முடிச்சையும் மரத்தடியில் வைத்து, மீண்டும் மனமுருகி பிரார்த்தனை செய்ய வேண்டும். அந்த முடிச்சை மரத்துக்கு அடியிலேயே வைத்துவிட்டால் போதும்.

அரசு மரம்: ஆனால், பழமையான அரச மரமாக இருக்க வேண்டும். அந்த மரத்துக்கு அடியில் ஏற்கனவே நிறைய பேர் வேண்டுதல்களை செய்திருக்க வேண்டும்.. சூரியன் மறைவதற்குள் இந்த 1 ரூபாய் முடிச்சை மரத்தடியில் வைத்துவிட வேண்டும். இதற்கு எந்த நாள் கிழமையும் கிடையாது. எந்த நாளிலும் செய்யலாம். விரைவில் உங்கள் விருப்பமும், பிரார்த்தனையும் விரைவில் நடக்கும்.

அதேபோல, ஒரு பாத்திரத்தில் கல் உப்பு, மஞ்சள் இரண்டையும் சம அளவில் சேர்த்து, அதை உச்சந்தலை கால் வரை தேய்த்து ஓடுகின்ற நீரில் குளித்து வந்தால், உடம்பிலுள்ள துர்சக்தி, தரித்திரங்கள் விலகும்.. அல்லது கல் உப்பு, மஞ்சள் இரண்டையும் கொண்டு, உங்களது 2 கைகளையும் நன்றாக தேய்த்து, ஓடும் நீரில் அல்லது கடலில் கழுவினாலும், துர்சக்தி நீங்கிவிடுமாம்.

உப்பு நீர் பரிகாரம்: கஸ்தூரி மஞ்சளும் பயன்படுத்தி கொள்ளலாம். ஓடும் நீர், கடல் நீர் இல்லாவிட்டாலும், கோவிலில் தரப்படும் தீர்த்தத்தை வாங்கி வந்து, குளிக்கும் நீரில் தலைக்கு குளிக்கலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் 3 வாரம் செய்து வரும்போது, குடும்பத்தில் நல்ல மாற்றம் தென்படும். இதை மஞ்சள் பயன்படுத்தினாலும், இந்த பரிகாரத்தை ஆண்களும் செய்யலாம்..

அதேபோல, கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், பிள்ளையார் கோயிலில் பெயரில் அர்ச்சனை செய்து, தேங்காய் எண்ணெயையும், விளக்கெண்ணையும் ஒன்றாக கலந்து, அர்ச்சனை செய்த தேங்காயில் ஊற்றி தீபம் ஏற்றினால் பிரச்சனைகள் விரைவில் விலகும். நம்முடைய முன்னேற்றம் தடைபடாமல், தேங்காமல் விருத்தியாகும்.

கண் திருஷ்டி: வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு மாப்பொடியால் அபிசேகம் செய்தால் செல்வ வளம் பெருகும். கடன் தொல்லைகள் நீங்கும்.. அதேபோல, வெள்ளெருக்கு விநாயகரை, வீட்டின் அறைகளில் உயரத்தில் வைத்து வழிபடுவதால், திருஷ்டிகள் குடும்பத்தில் இருந்தாலும் விலகிவிடுமாம்.

சிவபெருமானுக்கு பாலால் அபிஷேகம் செய்து வந்தாலும், வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் விரைவில் தீரும்.. ஆனால், இந்த பரிகாரத்தை திங்கட்கிழமைகளில் செய்வது மிகவும் விசேஷம் என்பார்கள்.

குங்குமம்: அதேபோல, வியாழக்கிழமைதோறும் குங்குமம் வாங்கி வைத்துக்கொண்டு வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு குங்குமத்தை கொடுத்து விட்டு வந்தால், கடன் பிரச்சினைகள் மெல்ல விடைபெறும். 11 வாரம் இப்படி குங்குமம் வாங்கி வைத்து வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு கொடுத்து வரவேண்டும். அதேபோல, சனி பகவானின் திருத்தலங்களான திருநள்ளாறு, சென்னையிலுள்ள வடதிருநள்ளாறு, ஆகிய தலங்களுக்கு சென்று வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+