Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எந்த ராசிக்காரர்கள் நாய்களை செல்ல பிராணிகளாக வளர்க்கலாம்? ஜோதிடம் சொல்வது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எந்த ராசிக்காரர்கள் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வளர்க்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம். அந்த குறிப்பிட்ட ராசிக்காரர்கள் செல்லப் பிராணிகளை வளர்த்தால்தான் அது அவர்களுக்கு நன்மையில் போய் முடியும் என்கிறது சாஸ்திரம்.

பொதுவாக பலருக்கு நாய் வளர்ப்பு, பூனை வளர்ப்பு, குருவிகள் வளர்ப்பு உள்ளிட்டவைகளில் ஆர்வம் அதிகம். சிலர் முயல், வாத்து, கோழி, ஆடு உள்ளிட்டவைகளை கூட வளர்ப்பார்கள். இன்னும் சிலர் கலர் மீன்களை வளர்ப்பதிலும் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

spirtuality dogs

இது எல்லாவற்றையும் விட சிலர் ஆமை, பல்லி இனங்கள், எலிகள் உள்ளிட்டவைகளை கூட வளர்க்கிறார்கள். அந்த வகையில் யாரெல்லாம் நாய், பூனைகளை வளர்க்கலாம் என்பதை பார்க்கலாம்.

குரு, சனி பகவானின் ஆதிக்கம் பெற்ற ராசிக்காரர்கள் நாய்கள் வளர்ப்பதால் நன்மைகளை பெறலாம். நாய்கள் வளர்ப்பதால் உங்களிடம் சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கும். நாய்கள் வளர்ப்பவர்களுக்கு கோபம் அதிகமாக வராது. வீட்டில் பூனை, குதிரை, மீன், நாய், ஆடு, மாடு உள்ளிட்ட பல விலங்குகளை நாம் பார்க்கிறோம்.

செவ்வாய், கேது, செவ்வாய், சனி ஆகியவை எந்த ஜாதகக்காரர்களுக்கு சேர்ந்து இருக்கிறதோ அவர்களுக்கு வளர்ப்பு பிராணியானது பாதியிலேயே இறந்துவிடும் அல்லது பாதியிலேயே ஓடிவிடும். இதில் கடக ராசிக்காரர்கள் அடங்குவார்கள். இவர்கள் நாய் வளர்க்கவே கூடாது. பொதுவாகவே சூரியன் பகை வீடாக இருந்தால் கடகம் மட்டுமின்றி எந்த ராசிக்காரர்களும் நாய் வளர்க்கவே கூடாது என ஜோதிடம் கூறுகிறது.

உங்கள் ஜாதகத்தில் நான்காம் அதிபதியோ நான்காம் பாவ அதிபதியோ கெட்டு போய்விட்டால் வளர்ப்பு பிராணிகளை நீங்கள் வளர்க்க முடியாது. அது உங்களுக்கு தங்காது. மீறி வளர்ப்பதால் உங்களுக்கு மன உளைச்சலும் போராட்டமும் வரும். சுக்கிரன் குருவுடன் சேர்ந்திருந்தாலோ சுக்கிரன் சந்திரன் 4ஆம் அதிபதியை விட பலமாக இருந்து 6,8, 12 -ல் மறையாமல் அஷ்டமாதிபதி பாதகாதிபதி உடன் சேராமல் இருந்தால் உங்களுக்கு வளர்ப்பு பிராணி வளர்ப்பு என்பது சாதகமாக இருக்கும்.

வளர்ப்பு பிராணிகளை கொடுக்கக் கூடிய காரகன் சுக்கிரன். இந்த சுக்கிரன் எந்த ஜாதகத்தில் ஆட்சியோ மூல திருகோணமோ உச்சமோ திரிகோண கேந்திர நிலைகளில் சுக்கிரன் இருந்தாலோ லக்னம் லக்னாதிபதி நம்மை அதிபதியோடு தொடர்பில் இருந்தாலோ வளர்ப்பு பிராணிகளை வளர்க்கலாம் என்று ஆசை இயல்பாகவே வரும்.

மேஷம், துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்கள் சேவல் படத்தை சனி உச்சம் பெற்ற காலத்தில் வீட்டில் வைப்பதால் அதிர்ஷ்டம் ஏற்படும். அது போல் மேஷம், ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் ராசிக்காரர்கள் வீட்டில் மீன் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. மீன் என்பது மீன ராசிக்குரிய குறியீடாக இருப்பதால் இந்த ராசிக்காரர்கள் மீன் வளர்ப்பது அவ்வளவு நல்ல பலன்களை தராது.

இந்த தகவல்கள் எல்லாம் ஆங்காங்கே கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டது. இதை முழுவதுமாக ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+