வாராஹி அம்மனை யாரெல்லாம் வழிபடலாம்? எந்த நாளில் கும்பிட்டால் விசேஷம்?
சென்னை: வாராஹி அம்மனை எப்போது யாரெல்லாம் வழிபடலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அது போல் எந்த நாளில் அவரை வழிபட்டால் பல்வேறு நன்மைகளை தரும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
சப்த கன்னியர்களில் ஒருவராக போற்றப்படுபவர் வாராஹி அம்மன். வராக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவின் பெண் வடிவம் என்றும் சிலர் சொல்கிறார்கள். பன்றியின் முகம், பெண்ணின் உடல் கொண்டவளாக இருக்கிறார் வாராஹி.

இவர் கருணை தெய்வம் என்றால் கோபக்காரி என்பதால் உக்ர தெய்வமாக கருதப்படுகிறார். இவரை வீட்டில் வைத்து வழிபட வேண்டும் என்றால் வீட்டை சுத்தமாக வைத்திருந்து, அவருக்கென பூஜை புனஸ்காரங்கள் செய்ய வேண்டும்.
தன்னை நம்பிய பக்தர்களுக்கு ஏற்படும் தீமையை அடித்து விரட்டிவிடுவார். ஆங்காங்கே வாராஹிக்கு கோயில்கள் இருந்தாலும் தஞ்சை பெரிய கோவிலிலும் காசியிலும் மட்டுமே வாராஹிக்கு தனி சன்னதி உள்ளது.
எந்த கோயிலிலும் முதலில் விநாயகருக்குத்தான் பூஜை செய்வது வழக்கம். ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் வாராஹிக்கு முதலில் பூஜை செய்யப்படுகிறது.
வீட்டில் வாராஹியின் படம் அல்லது சிலையை வைக்க விரும்பினால் அதை வடக்கு நோக்கி வைக்க வேண்டும். வீட்டில் தினமும் ஒரு அகல் விளக்கு ஏற்றி வைத்து வழிபட வேண்டும். நைவேத்தியமாக தயிர் சாதம், மாதுளை பழத்தை படைக்கலாம்.
அது போல் கிருத்திகை, பூரம், மூலம், ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வாராஹி அம்மனை வழிபடலாம். அது போல் மகரம், கும்ப ராசிக்காரர்களும் வாராஹியை வழிபடலாம். வாராஹியை பஞ்சமி, பவுர்ணமி, அமாவாசை ஆகிய திதிகளில் வணங்கினால், வாராஹி அருள் பூரணமாக கிடைக்கும் என்கிறார்கள்.
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவாள் வாராஹி என்கிறார்கள். தேய்பிறை பஞ்சமி நாளில் வாராஹியை வழிபட்டால் கடன் தீரும். அது போல் வளர்பிறை பஞ்சமியில் வாராஹியை வழிபட்டால் வாழ்வில வளம் பெறலாம் என்கிறார்கள்.
தேய்ப்பிறை பஞ்சமி திதி இருக்கும் நாளில் இரவு 9 மணி முதல் 10 மணி வரை அன்னை வாராஹியை வழிபடலாம். 5 பஞ்சமி அல்லது 5 ஞாயிற்றுக்கிழமைகளில் தேங்காய் மூடியில் நெய் விளக்கம் ஏற்றி வாராஹியை வழிபடலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications