இந்த தவறை மறந்தும் செய்யாதீங்க.. பூஜை அறையில் இந்த "நீரை" வைத்தாலே செல்வம் கொட்டுமே.. பூஜையறை டிப்ஸ்
சென்னை: பூஜையறையில் நாம் சில விஷயங்களில் கவனம் செலுத்தினாலே, நம்முடைய வீடுகளில் செல்வம் தங்கி , குடும்பம் செழிப்புடன் திகழும் என்கிறார்கள். இதுகுறித்து, ஆன்மீகத்தில் ஏராளமான குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளன. அதில் ஒருசிலவற்றை பற்றி மட்டும் பார்ப்போம்.
காலையில் எழுந்தவுடன் முதலில் வீட்டின் பின்புறம் உள்ள கதவை திறப்பது உள்ளது.. ஒருவேளை ஒருவாசல் மட்டுமே இருந்தால், முதலில் குளிக்கும் இடத்தில் சென்று, குளித்துவிட்டு வர வேண்டும்.

பிறகு நெற்றியில் குங்குமம், திருநீர் இதில் ஏதேனும் ஒன்றை வைத்துக் கொண்டு தான் முன்வாசல் கதவை திறக்க வேண்டும்... அப்போதுதான் லட்சுமி கடாட்சம் வீட்டிலேயே தங்கியிருக்கும்.
கோலம்: வாசலை தெளித்து கோலம் போட்டுவிட்டு வந்த பிறகு கை கால் மட்டும் கழுவ வேண்டும். பிறகுதான் பூஜை அறைக்குச் சென்று விளக்கேற்றலாம். ஆனால், குளித்தபிறகே வாசல் தெளிக்க வேண்டும். வாசற்படியில் விளக்கேற்றும் பழக்கம் உள்ளவர்கள், வீட்டு வாசலில் விளக்கேற்றிவிட்டு அதன் பிறகே, வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும்..
ஆனால், அதற்கு முன்பு, சாமி படங்களுக்கும், விளக்குக்கும் போடப்பட்டிருக்கும் பழைய பூக்களை அப்புறப்படுத்திவிட வேண்டும்.. ஊதுபத்தி, சாம்பிராணியின் தூசுகளையும் துடைத்தெடுக்க வேண்டும்.
சாமி படங்கள்: தெற்கு நோக்கி சாமி படங்களை வைக்கக்கூடாது. கிழக்கு பக்கம் முடியாவிட்டால் தெற்கு பக்கத்தை தவிர பிற திசைகளை பார்த்து படங்களை வைத்து வணங்கலாம்.. வீட்டில் கோலம் போட்டுவிட்டுதான், விளக்கேற்றிவிட்டுதான் கோயிலுக்கு செல்ல வேண்டும்...
கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, லட்சுமி தேவியும் நம்முடனேயே வீட்டுக்கு வருகின்றாள் என்று நம்பப்படுகிறது. அதனால், எங்கேயும் உட்காரக்கூடாது. ஆனால், அதற்கு முன்பு, சாமி படங்களுக்கும், விளக்குக்கும் போடப்பட்டிருக்கும் பழைய பூக்களை அப்புறப்படுத்திவிட வேண்டும்.. ஊதுபத்தி, சாம்பிராணியின் தூசுகளையும் துடைத்தெடுக்க வேண்டும்.
நைவேத்தியம்: தினமும் கடவுளுக்கு நைவேத்தியம் வைக்க முடியாது. எனவே, பால், உலர் பழங்கள், பழங்கள், கல்கண்டு போன்றவற்றை வைத்து வழிபடலாம். நைவேத்தியம் வைத்த பொருட்களை கடவுள் வழிபாடு முடிந்ததுமே செலவழிக்க வேண்டும்.., அதிலேயே மறுநாள் வரை வைத்திருந்துவிட்டு அகற்றக்கூடாது... காலையில் வீட்டிலுள்ள குளித்து விட்டு கடவுள் வழிபாட்டில் ஈடுபடும் வரை, விளக்கு எரிய வேண்டும்.
நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து, அந்த உணவை மறுபடியும் சுவாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது. சில்வர் பாத்திரத்தில் நேரடியாக வைத்து நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலை வைத்தே, செய்ய வேண்டும்.
துளசி நீர்: சிறிது துளசி இலைகள் தண்ணீரில் வைக்கப்பட்டு பூஜையறையில் எப்போதுமே வைக்க வேண்டும்.. இதனால், அந்த இடமே தூய்மையாகிறது.. தெய்வங்களையும் மகிழ்விக்கிறது. மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த துளசி நீரைக் குடிப்பது உடலையும் மனதையும் சுத்தப்படுத்துகிறது.
-
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி












Click it and Unblock the Notifications