சடலமாக நீங்கள்.. அடிக்கடி கனவு வருதா? அச்சம் வேண்டாம்.. கனவு சாஸ்திரம் சொல்வதென்ன?
சென்னை: சிலருடைய கனவில் சடலங்கள் வரும். கனவு காண்பவரே இறந்து போயிருப்பது போல கனவு வரும். சில நேரங்களில் உறவினர்கள் இறந்து போயிருப்பது போலவும் அவர்களுக்கு மாலை போடுவது போலவும் கனவு வந்து போகும். இப்படி சடலங்கள் கனவில் வருவது பற்றி கனவு சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளதை பார்க்கலாம்.
குல தெய்வ கோவிலுக்கு சென்று மாலை போடுவது போல கனவு கண்டால் மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். துறவிகள் கனவில் வந்தால் பெரியவர்கள் உதவி தகுந்த நேரத்தில் கிடைக்கும் என்று அர்த்தம். கோயில், குளம், மரம், போன்ற இடங்களில் கூட்டத்தை கனவில் கண்டால் தொழில் மேன் மேலும் விருத்தி அடையும் என்று அர்த்தம். முனிவர்கள், யோகிகள் அல்லது மகான்கள் கனவில் வந்தால் மிகவும் நல்லது. இது நீங்கள் பொது வாழ்கையில் ஈடுபட போவதற்கான அறிகுறியாகும்.

பெரிய கூட்டம் கனவில் வந்தால் அது கல்யாண வீடாக இருந்தால் நல்லது கிடையாது என்று அர்த்தம். அதுவே ஒரு சாவு வீடாக இருந்தால் நல்லது என்று அர்த்தம். விவசாயி நிலத்தை உழுவதைப்போல் கனவு வந்தால், சேமிப்பு பெருகும் என்று அர்த்தம். முருங்கை மரம் அல்லது முருங்கை இலையை கனவில் கண்டால் சுபிட்சம் வரப்போகிறது என்று அர்த்தமாகும்.
வழுக்கை தலை கொண்ட மனிதரை கனவில் கண்டால் அது உங்கள் கணவராக இருந்தால் நன்மை உண்டு. அதுவே உங்களுக்கு சம்பந்தமில்லாத வேறு ஒருவர் வழுக்கை தலையுடன் கனவில் வந்தால் கையில் காசு தங்காது. கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று பொருள்.
ஊனமுற்றவர்கள் அல்லது மாற்று திறனாளிகள் கனவில் வந்தால் உங்களுக்குள் இவ்வளவு நாட்கள் மறைந்து கிடந்த திறமைகள் சரியான நேரத்தில் வெளிப்படும் என்று அர்த்தம். மனநலம் சரியில்லதவர்கள் அல்லது மனநல மருத்துவமனை கனவில் வந்தால் நீங்கள் வரும் நாட்களில் நிதானம் தவறி எதையோ செய்ய போகிறீர்கள் என்று அர்த்தம். பிச்சை போடுவது போல கனவு வந்தால் லஷ்மி கடாஷம் ஏற்படும் என்று அர்த்தம்.
ஒரு மனிதனை வெட்டுவது பற்றிய கனவு, பார்ப்பவர் தனது குடும்பத்தினர் அல்லது நண்பர்களுக்கு நெருக்கமான ஒருவரை இழக்க நேரிடும் என்பதைக் குறிக்கலாம். நீங்கள் இறந்து விட்டது கனவு வந்தால் உங்களின் ஆயுள் கூடும் என்று அர்த்தம். நீங்கள் இறந்து போவது போல கனவில் வந்தால் மனதில் இருந்த கவலைகள் அனைத்தும் நீங்கும் என்று அர்த்தமாகும். நமக்கு வேண்டியவர் யாராவது இறந்துவிட்டது போல கனவு வந்தால் நம்மை சூழ்ந்திருந்த துன்பங்கள் விலகும் என்று அர்த்தம்.பிணத்தை தூக்கிச் செல்வது போல கனவு கண்டால் நன்மை ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications