சடலமாக நீங்கள்.. அடிக்கடி கனவு வருதா? அச்சம் வேண்டாம்.. கனவு சாஸ்திரம் சொல்வதென்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிலருடைய கனவில் சடலங்கள் வரும். கனவு காண்பவரே இறந்து போயிருப்பது போல கனவு வரும். சில நேரங்களில் உறவினர்கள் இறந்து போயிருப்பது போலவும் அவர்களுக்கு மாலை போடுவது போலவும் கனவு வந்து போகும். இப்படி சடலங்கள் கனவில் வருவது பற்றி கனவு சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளதை பார்க்கலாம்.

குல தெய்வ கோவிலுக்கு சென்று மாலை போடுவது போல கனவு கண்டால் மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். துறவிகள் கனவில் வந்தால் பெரியவர்கள் உதவி தகுந்த நேரத்தில் கிடைக்கும் என்று அர்த்தம். கோயில், குளம், மரம், போன்ற இடங்களில் கூட்டத்தை கனவில் கண்டால் தொழில் மேன் மேலும் விருத்தி அடையும் என்று அர்த்தம். முனிவர்கள், யோகிகள் அல்லது மகான்கள் கனவில் வந்தால் மிகவும் நல்லது. இது நீங்கள் பொது வாழ்கையில் ஈடுபட போவதற்கான அறிகுறியாகும்.

Dreams and Meaning: Dead body dreams Kanavu Sastram solvathenna

பெரிய கூட்டம் கனவில் வந்தால் அது கல்யாண வீடாக இருந்தால் நல்லது கிடையாது என்று அர்த்தம். அதுவே ஒரு சாவு வீடாக இருந்தால் நல்லது என்று அர்த்தம். விவசாயி நிலத்தை உழுவதைப்போல் கனவு வந்தால், சேமிப்பு பெருகும் என்று அர்த்தம். முருங்கை மரம் அல்லது முருங்கை இலையை கனவில் கண்டால் சுபிட்சம் வரப்போகிறது என்று அர்த்தமாகும்.

வழுக்கை தலை கொண்ட மனிதரை கனவில் கண்டால் அது உங்கள் கணவராக இருந்தால் நன்மை உண்டு. அதுவே உங்களுக்கு சம்பந்தமில்லாத வேறு ஒருவர் வழுக்கை தலையுடன் கனவில் வந்தால் கையில் காசு தங்காது. கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று பொருள்.

ஊனமுற்றவர்கள் அல்லது மாற்று திறனாளிகள் கனவில் வந்தால் உங்களுக்குள் இவ்வளவு நாட்கள் மறைந்து கிடந்த திறமைகள் சரியான நேரத்தில் வெளிப்படும் என்று அர்த்தம். மனநலம் சரியில்லதவர்கள் அல்லது மனநல மருத்துவமனை கனவில் வந்தால் நீங்கள் வரும் நாட்களில் நிதானம் தவறி எதையோ செய்ய போகிறீர்கள் என்று அர்த்தம். பிச்சை போடுவது போல கனவு வந்தால் லஷ்மி கடாஷம் ஏற்படும் என்று அர்த்தம்.

ஒரு மனிதனை வெட்டுவது பற்றிய கனவு, பார்ப்பவர் தனது குடும்பத்தினர் அல்லது நண்பர்களுக்கு நெருக்கமான ஒருவரை இழக்க நேரிடும் என்பதைக் குறிக்கலாம். நீங்கள் இறந்து விட்டது கனவு வந்தால் உங்களின் ஆயுள் கூடும் என்று அர்த்தம். நீங்கள் இறந்து போவது போல கனவில் வந்தால் மனதில் இருந்த கவலைகள் அனைத்தும் நீங்கும் என்று அர்த்தமாகும். நமக்கு வேண்டியவர் யாராவது இறந்துவிட்டது போல கனவு வந்தால் நம்மை சூழ்ந்திருந்த துன்பங்கள் விலகும் என்று அர்த்தம்.பிணத்தை தூக்கிச் செல்வது போல கனவு கண்டால் நன்மை ஏற்பட போகிறது என்று அர்த்தம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+