வெற்றிலை பாக்கு உங்க கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? ஒரு வெற்றிலை போதுமே.. பல பிரச்சனை தீரும்
சென்னை: வெற்றிலை உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடியது.. அதேசமயம், பூஜைகளிலும், பரிகாரங்களிலும் வெற்றிலையின் முக்கியத்துவம் என்ன? வெற்றிலையை கனவில் கண்டால் என்ன அர்த்தம்?
எந்தவொரு சுபகாரியம் என்றாலும், வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தேங்காய் இவைகள் கட்டாயம் இடம்பெற்றுவிடும்.. அர்ச்சனையிலும் இந்த 3 பொருட்கள் கட்டாயம் இடம்பெறும். அந்த அளவுக்கு இந்த மத வழிபாட்டில் வெற்றிலையின் பங்கு தவிர்க்க முடியாததாகி விட்டது.

தாம்பூலம்: வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்வதியும், காம்பில் பார்வதியும் வாசம் செய்வதாக ஐதீகம்... இந்த 3 தேவிகள் இருக்கும் இடங்களிலெல்லாம் முப்பெரும் தேவர்களும் இருப்பார்கள். எனவே, இவர்களின் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், வாழ்க்கையிலும் வெற்றி, மங்கலம், செல்வம் ஆகியன நிறைந்து இருக்க வேண்டும் என்பதற்காகவும் வெற்றிலை பாக்கு அர்ச்சனைக்கு வைத்து வழிபடுகிறார்கள்.
அதேபோல, பரிகார செய்வதிலும் வெற்றிலைக்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளது.. எப்போதுமே வீட்டில் மனநிம்மதி குறைந்தாலோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது குடும்பத்தில் வறுமை பீடித்தாலோ, இதற்கெல்லாம் வெற்றிலை தீர்வை தருகிறது.
பரிகாரம்: வெற்றிலையை வாங்கி, அதை கழுவி சுத்தம் செய்து, வீட்டின் வாசலிலேயே தொங்கவிட்டால், வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல் பரவும் என்கிறார்கள்.. ஆனால், வெற்றிலையை காய விடக்கூடாது.. தினந்தோறும் புதிய இலையை கட்டி தொங்கவிட வேண்டும்.
அதேபோல, ஒரு தாம்பூல தட்டின்மீது ஒரே ஒரு வெற்றிலையும், அதன்மீது பச்சை கற்பூரத்தையும் வைக்க வேண்டும்.. பச்சை கற்பூரத்தில் ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய் விட்டு, இந்த தட்டை அப்படியே பூஜையறையில் வைத்து பச்சை கற்பூரத்தை ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றும்போது, உங்களது பிரார்த்தனையை மனமுருகி சொல்லலாம்.
பலன்கள்: அதேபோல, வெற்றிலை வாங்குவது போல் கனவு வந்தால் உங்களுக்கு நல்ல பலன்கள் வரப்போகிறது என்று அர்த்தமாம்.. அல்லது இத்தனை நாளும் உங்களை சூழ்ந்து வந்த இன்னல்கள் தீர போகிறது என்று அர்த்தமாம்.. திருமணம் நடைபெறும் நிச்சய தாம்பூலம் வைபவத்தை காண்பது நல்லது. திருமணம் ஆகாதவர்களும் இதனை கனவில் கண்டால் விரைவில் அவர்களுக்குத் திருமணம் நடந்துவிடுமாம்.
அதேபோல, ஏதாவது ஒரு விஷயத்தை செய்யலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருக்கும்போது, உங்கள் கனவில் வெற்றிலை பாக்கு வந்தால், அது பச்சை கொடி காட்டுவதாகவே அர்த்தமாம்.. அந்த செயலை நீங்கள் குழப்பமின்றி செய்யலாம்.. அதில் உங்களுக்கு வெற்றியும் கிடைக்குமாம்.












Click it and Unblock the Notifications