திருப்பதி கோவிலில் பக்தர்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க புதிய தொழில் நுட்ப வசதி..மார்ச் 1 முதல் அமல்
திருப்பதியில் தனிநபர் அதிக லட்டு டோக்கன்களை பெறுவதைத் தவிர்க்கவும், இலவச தரிசன வளாகத்திலும், பக்தரின் முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க வருகிற 1ம்தேதி முதல் சோதனை முறையில் முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட உள்ளதாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நேற்றைய தினம் பொது தரிசனத்தில் பக்தர்கள் 6 மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் வரிசையில் காத்திருக்காமல் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதி சென்று வந்தாலே திருப்பம் ஏற்படும் என்பது நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஏராளமான பக்தர்கள் நாள் கணக்கில் கூட காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். சில நிமிடங்கள் மட்டுமே தரிசனம் கிடைத்தாலும் மன திருப்தியுடன் பக்தர்கள் வீடு திரும்புகின்றனர்.
சர்வ தரிசனம், விரைவு தரிசனம், விர்சுவல் தரிசனம், கட்டண சேவைகள் என பலவித சேவைகளில் பக்தர்கள் ஏழுமலையானை கண் குளிர தரிசித்து செல்கின்றனர். இதுநாள் வரை ஆன்லைன், நேரடியாக புக் செய்யும் பக்தர்கள் அடையாள அட்டைகளை காண்பித்து டிக்கெட் புக் செய்து வந்தனர். இனி பக்தரின் முகம் அடையாளம் காணும் தொழில் நுட்ப வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்திற்கான டிக்கெட், லட்டு பிரசாதம், அறை ஒதுக்கீடு, அறைகளை காலி செய்து முன்பணத்தை திரும்ப பெறுதல் போன்றவற்றில் வெளிப்படை தன்மையை அதிகரிக்கப்பட உள்ளது. இதற்காக, முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை வருகிற மார்ச் 1ம் தேதி முதல் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்த உள்ளது.
தனி நபர் அதிக லட்டு டோக்கன்களை பெறுவதை தவிர்க்கவும், இலவச தரிசன கவுன்டரில் அறை ஒதுக்கீடு ஆகியவற்றில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இதனால், இடைத்தரகர்கள் முறைகேடு செய்து அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க முடியும். சோதனை முறையில் கொண்டு வரப்படும் இத்திட்டத்தில் பக்தர்களுக்கு ஏற்படும் இடையூறுகள் கண்டறியப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications