வியாழக்கிழமையா பார்த்து கருட தரிசனம் செய்யுங்கள்! கண்டம் நீங்கி உங்கள் ஆயுள் அதிகரிக்கும்!
இதுகுறித்து நானறிந்த ஆன்மீகம் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: 'கருட தரிசனம் கோடி புண்ணியம்' ஏன் தெரியுமா?
பகவான் நாராயணனின் வாகனமாக கருடன் இருக்கிறார். பக்தர்களின் துன்பத்தை போக்க பெருமாள் விரைந்து வருவதற்கு கருடன் பேருதவி செய்வதால்தான் அவரை 'கருடாழ்வார்' என்று பக்தர்கள் அன்போடு அழைக்கிறார்கள்.

கருடனுடைய மகிமையை ஏகாதசி, திருவோணம் போன்ற புண்ணிய தினங்களில் படிப்பவர்கள் கடும் நோயில் இருந்து விடுதலைப் பெறுவார்கள். கருடனுக்கு ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீரியம், சக்தி, தேஜஸ் என்ற ஆறு குணங்கள் உண்டு. 'ஆயிரம் சுபசகுணங்கள் கிடைத்தாலும், அது ஒரு கருட தரிசனத்திற்கு ஈடாகாது' என்று சொல்லப்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த கருட தரிசனத்தின் பலன்களைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
சூரிய உதயத்தின் போது கருட தரிசனம் செய்தால், நினைத்த காரியம் கைக்கூடும். கருடன் வானத்தில் பறக்கும் போது தரிசனம் செய்வதும், கருடனின் குரலைக் கேட்பதும் நற்பலன்களை தரும்.
ஒவ்வொரு நாள் கருட தரிசனத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு.
ஞாயிற்றுக்கிழமை கருட தரிசனம் கிடைத்தால், நமக்கு ஏற்பட்டிருக்கும் நோய்கள் அகலும் என்று சொல்லப்படுகிறது.
திங்கட்கிழமை கருடரை தரிசித்தால், குடும்பத்தில் ஏற்படும் கஷ்டம் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.
செவ்வாய்க்கிழமை தரிசனம் கிடைத்தால், மனதில் இருக்கும் பயம் நீங்கி தைரியமான மனநிலை உண்டாகும்.
புதன் கிழமை கருட தரிசனம் கிடைத்தால், கண்ணுக்கு தெரிந்த மற்றும் தெரியாத எதிரிகள் அழிவார்கள்.
வியாழக்கிழமை கருட தரிசனம் கிடைத்தால், நமக்கு ஏற்பட்டிருக்கும் கண்டங்கள் நீங்கி ஆயுட்காலம் அதிகரிக்கும்.
வெள்ளிக்கிழமை கருட தரிசனம் கிடைத்தால், லக்ஷ்மி கடாட்சம் கிடைக்கும். மேலும் தங்க ஆபரணங்கள் சேரும்.
சனிக்கிழமையில் கருடனை தரிசித்தால், நம்முடைய கர்மவினைகள் அனைத்தும் நீங்கி மோட்சம் கிட்டும் என்று சொல்லப்படுகிறது.
கோவில் கும்பாபிஷேகத்தின் போது கருடன் வந்து வட்டமிட்டால் கும்பாபிஷேகம் சிறப்பாக நிறைவடைந்தாக கருதுவார்கள். சபரிமலையில் இன்றைக்கும் ஆபரண பெட்டியை எடுத்து வரும் போது கருடன் வலம் வருவதைக் காணலாம். 'கருட தரிசனம் கோடி புண்ணியம்' என்று சொல்லப்படுகிறது. எனவே, நல்ல காரியங்களுக்கு செல்லும் போது, வீட்டின் வாசல் படியில் மாட்டி வைத்த கருடனுடைய படத்தை தரிசித்துவிட்டு சென்றால் காரிய சித்தி ஏற்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications