Gokulashtami 2025: இன்று கோகுலாஷ்டமி! கிருஷ்ணருக்கு சீடை, முறுக்கு படைக்க உகந்த நேரம் எது?
சென்னை: நாடு முழுவதும் கோகுலாஷ்டமி இன்று கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணருக்கு பிடித்தமான தின்பண்டங்களை வைத்து படைப்பதற்கான உகந்த நேரம் என்ன என்பதை பார்க்கலாம்.
இதுகுறித்து ஆத்ம ஞான மையம் யூடியூப் சேனலில் தேச மங்கையர்க்கரசி கூறியிருப்பதாவது: கிருஷ்ணர் பிறந்த அந்த அற்புதமான நாள் ஆவணி மாதம், அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் வசு தேவருக்கும் தேவகிக்கும் 8ஆவது குழந்தையாக பிறந்தார். அப்போ ஆவணி மாதம், அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் வர வேண்டும். இந்த மூன்றும் சேர்ந்து வருவது அபூர்வமான ஒன்று. சில நேரங்களில் ஆவணியில் இல்லாமல் ஆடி மாதத்தில் அஷ்டமி எனும் திதி வந்துவிடும். ஆனால் ரோகிணி நட்சத்திரம் ஆவணி மாதத்தில்தான் வரும். இதுதான் பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

ஒருவரது பிறந்தநாளை நாம் கொண்டாடுவது நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்து கொண்டாடப்படக் கூடியது. தெய்வீகமான அந்த அவதார புருஷனாக எல்லோருக்கும் அருள் புரிய பரமாத்வாக அவதாரம் செய்த கிருஷ்ண பரமாத்மாவுக்கு நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்து ரோகிணி என்று வருகிறதோ அன்று கொண்டாடப்படுவது கிருஷ்ண ஜெயந்தி என்பதாகும்.
அஷ்டமி என்பது கிருஷ்ணரின் திதி, அவருடைய திதியை கணக்கிட்டு அவரது பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்றால் கோகுலாஷ்டமி என்று பெயர். தமிழகத்தில் கோயில்களில் அதிகமாக கிருஷ்ண ஜெயந்திதான் கொண்டாடப்படுகிறது.
ஆனால் வட இந்தியாவில் கோகுலாஷ்டமியை விமரிசையாக கொண்டாடுவார்கள். கோகுலாஷ்டமியில் கண்ணனுக்கு விரதமிருந்து கண்ணனுக்கு கால் தடம் போட்டு அவருக்கு பிடித்த பொருட்களை வைத்து எங்க வீட்டுக்கு வா என பலரும் வழிபாடு நடத்துவர். ஒரு சிலர் கிருஷ்ண ஜெயந்தியைத்தான் கொண்டாடுவார்கள். அவரவர் வழக்கப்படி கொண்டாடிக் கொள்ளுங்கள்.
கோகுலாஷ்டமி என்பது ஆகஸ்ட் 16 ஆம் தேதியான இன்று அதிகாலை 1.41 மணி முதல் இரவு 11.13 மணி வரை உள்ளது. கிருஷ்ண ஜெயந்தி என்று வருகிறது என்றால் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி வருகிறது. கோயில்களில் செப்டம்பர் 14, 15, 16 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படும்.
செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி அஷ்டமி திதியானது காலை 9.16 மணிக்கு தொடங்குகிறது. ரோகிணி நட்சத்திரமானது பிற்பகல் 1.17 மணிக்கு தொடங்குகிறது. ரோகிணி நட்சத்திரம், அஷ்டமி திதியில் வழிபாடு செய்ய நினைத்தால் செப்டம்பர் 14 ஆம் தேதி காலை 10.30 மணி முதல் 11.45 மணி வரை வழிபாடு செய்யலாம்.
செப்டம்பர் 15 ஆம் தேதி பாஞ்சராத்திர ஜெயந்தி என கோயில்களில் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 16 ஆம் தேதியும் இந்த கொண்டாட்டம் தொடர்கிறது. கோகுலாஷ்டமி கொண்டாடுவதாக இருந்தால் ஆகஸ்ட் 16ஆம் தேதி அஷ்டமி திதி முழுவதும் இருக்கிறது.
காலை 10.30 மணி முதல் 11.50 மணி வரை வழிபாடு செய்யலாம். மாலை 6 மணிக்கு மேலும் வழிபாடு செய்து கொள்ளலாம். இந்த இரண்டில் எந்த நாளில் வணங்கினாலும் நன்மைதான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications