தங்கம் வாங்கறீங்களா? கற்றாழை செடியை வீட்டில் வைத்திருக்கிறீங்களா? செல்வம் பெருக இந்த டிப்ஸ் பாருங்க
சென்னை: கற்றாழை செடிகளை வீடுகளில் வளர்த்தால் செல்வம் பெருகும் என்பார்கள்.. கற்றாழை செடியை வீடுகளில் வளர்க்க காரணம் என்ன தெரியுமா? இதற்கும் அறிவியல் காரணம் உண்டு, ஆன்மீக காரணமும் உண்டு.
கற்றாழையை பொறுத்தவரை, பெண்களுக்கான மூலிகை என்று சொல்வார்கள்.. காரணம், கர்ப்பப்பையில் உண்டாகும் நோய்களை நீக்குவதில் கற்றாழைக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது..

இந்த கற்றாழையில் நிறைய சித்த மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.. குறிப்பாக, மாதவிடாய் பிரச்சனைகள் அத்தனையையும் சரிசெய்வதற்கு இந்த கற்றாழையே மிக முக்கியமான மூலப்பொருட்களாகும். இந்த கற்றாழையில் சாறு எடுத்து, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து இளம்பெண்களுக்கு தருவார்கள். இதனால், மாதவிடாய் கோளாறுகள் மட்டுமல்லாமல், மார்பகப் புற்றுநோய் வராமலும் தடுக்கப்படுமாம்.
மூலப்பொருட்கள்: அத்துடன், சரும பாதுகாப்புக்கு இந்த கற்றாழை உதவுவதால்தான், ஃபேஸ் கிரீம்கள், சோப்புகள், ஷாம்ப்புகளில், கற்றாழையை மூலப்பொருட்களாக பயன்படுத்துகிறார்கள். வைட்டமின் B, C சத்துக்கள் நிறைந்துள்ளன.. எனவே, தினமும், வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸை குடிப்பதால், உடல் எடை குறைகிறது...
பெண்களுக்கு அதிகமாகவே இந்த கற்றாழை பயன்படுவதால்தான், "கன்னி", "குமரி" என்ற பெயர்களில் இந்த கற்றாழையை அழைக்கிறார்கள். அதுமட்டுமல்ல, இந்த கற்றாழைக்கு தீய சக்திகளை தடுக்கும் குணமும் உண்டு. அதனால்ன், வீடுகளின் முன்பு கற்றாழைகள் தொங்கவிடப்படுகின்றன.
ஆக்சிஜன்: இதற்கு காரணம், ஆக்ஸிஜனை அதிகளவில் பரப்பும் சக்தி, இந்த கற்றாழைக்கு உள்ளது.. மண் எதுவுமே இல்லாமலே, கற்றாழைகள் செழிப்புடன் எப்போதும் காணப்பட காரணமும் இதுதான். குறிப்பாக, காற்றிலிருக்கும் பிராணவாயுவை ஈர்த்துக்கொள்வதால்தான், இந்த செழுமை நீடிக்கிறது.. அறிவியல் காரணங்கள் இவ்வாறு இருக்க, வீடுகளில் கற்றாழை வளர்ப்பதில், வாஸ்துப்படியும் சில காரணம் சொல்லப்படுகிறது.
ஆன்மீக காரணங்களை எடுத்துக்கொண்டால், கற்றாழை இருக்குமிடத்தில் லட்சுமிதேவி வசிப்பதாக சொல்கிறார்கள்.. எனவே, கற்றாழை மங்களகரமான செடியாக கருதப்படுவதால்தான் வீடுகளில் வளர்க்கப்படுகிறது.. குறிப்பாக, மேற்கு திசையே இதற்கு சிறந்தது என்கிறார்கள்.. இதனால், குடும்பத்திலிருக்கும் நிதி சுமைகள் நீங்குவதுடன், பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் வரக்கூடும்.. வீட்டிலும் நேர்மறை ஆற்றல் அதிகரித்து காணப்படும்..
கற்றாழைகள்: அதேபோல, வீடுகளில் கற்றாழைகளை வளர்த்தால், காதல் வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள் தீருகிறதாம்.. அன்பும் பெருகுமாம்.. எனவே, வாஸ்து படி, கற்றாழை செடியை, வடமேற்கு திசையில் நடக்கூடாது.. இதனால், மோசமான பலன்கள் கிடைத்துவிடும். வீட்டின் கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் கற்றாழை செடியை நடலாம்.
வீடுகளில் தங்க நகைகளை வைப்பதில்கூட இப்படி திசைகள் உண்டு.. குறிப்பாக வாஸ்துப்படி, தங்கத்தை வீட்டின் தென்மேற்கு பகுதியில் வைக்க வேண்டுமாம்.. இதனால், வீட்டில் தங்கம் அதிகரிக்க செய்யும் என்கிறார்கள்.
தங்க நகைகள்: எக்காரணம் கொண்டும் வீட்டின் வடமேற்கு திசையில் தங்கம் வைப்பதை தவிர்க்க வேண்டுமாம். அதேபோல நகைகள் இருக்கும் லாக்கர் வடக்கு நோக்கி இருக்க வேண்டும்.. பொதுவாகவே, லாக்கர் இருக்கும் அறையின் சுவரின் நிறமும் மஞ்சள் கலரில் இருக்க வேண்டுமாம்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications