பெருமாள் கோயிலை போல் திருத்தணி முருகன் கோயிலுக்கு ஒரு சிறப்பு! அது என்ன தெரியுமா?
சென்னை: திருத்தணி முருகன் கோயிலின் சிறப்புகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஆபத்சகாய விநாயகரும் திருத்தணி முருகன் கோயிலில் உள்ளது. இந்த விநாயகரை வணங்கினால் நம்மை ஆபத்துகளில் இருந்து காத்தருள்வார் என்பது ஐதீகம். எனவே இந்த கோயிலுக்கு வருவோர் ஆபத்சகாய விநாயகரை வணங்காமல் செல்ல மாட்டார்கள்.
இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: திருத்தணி முருகன் திருத்தலத்தின் சிறப்புகள்...

* திருத்தணிகைத் தலத்தில் வழங்கப்படும் விபூதி, சந்தனம் ஆகிய பிரசாதங்கள் தீராத வியாதிகளைத் தீர்க்கும் அருமருந்தாக விளங்குகின்றன என்பது பக்தர்கள் நம்பிக்கை.
* திருத்தணிகையில் பக்தர்கள் எடுக்கும் காவடி வித்தியாசமாக இருக்கும். நீண்ட குச்சியின் ஒரு முனையில் பூக்களும், மற்றொரு முனையில் அர்ச்சனைப் பொருள்களும் கட்டி காவடி எடுப்பது திருத்தணியில் மட்டுமே உள்ள வழக்கம்.
* தமிழ்ப் புத்தாண்டு தினத்தில், கீழேயுள்ள ஸ்ரீஆறுமுக சுவாமி கோயிலில் இருந்து, 'முருகனுக்கு அரோகரா' என்ற சரண கோஷத்துடன் பக்தர்களால் சுமந்து செல்லப்படும் 1008 பால் குடங்கள் மலை மேல் உள்ள முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுவது கண் கொள்ளாக் காட்சி.
* மகா சிவராத்திரி அன்று தணிகை முருகனுக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும்.
* கோயிலுக்கு வரும் பக்தர்கள், மூலவர் உட்பட எல்லா சந்நிதிகளையும் தரிசித்த பிறகு, நிறைவாக இங்குள்ள ஆபத்சகாய விநாயகரை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.
* திருமால் ஆலயங்களைப் போன்று, முருகனின் திருப்பாத சின்னத்தை (சடாரி) பக்தர்களின் தலையில் வைத்து ஆசி வழங்குவது, திருத்தணிக் கோயிலின் தனிச் சிறப்பு... இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications